சன்னி லியோனை நம்பி மோசம் போன ரசிகர்கள்..! என்னா பந்தா பண்ணினாங்க வச்சாங்கள ஆப்பு..!

தற்போது பல்வேறு நாடுகளில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று மிக அதிகமான ஆனதன் காரணமாக பல்வேறு இடங்களில்  புத்தாண்டு பண்டிகை கொண்டாடும் விதம் தடைசெய்யப்பட்டது மட்டுமின்றி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

அந்த வகையில் பல மாநிலங்களில் பல்வேறு அறிக்கைகள் வெளிவந்த நிலையில் பாண்டிச்சேரி அரசு மட்டும் எந்த ஒரு தடையும் மக்களுக்கு அறிவிக்கவில்லை அந்தவகையில் பாண்டிச்சேரி மகள்கள் மிகவும் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருந்த நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி ஊட்டும் வகையில் ஒரு அறிவிப்பு வெளியானது.

அதாவது கவர்ச்சி நடிகை  என்று பெயர் போன நடிகை சன்னிலியோன் அவர்கள் புதுவையில் புத்தாண்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள போவதாக அறிவிப்பு வெளியானது அதேபோல இந்த நிகழ்ச்சியானது ஜனவரி 1-ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரியவந்தது.

அதேபோல இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன் பங்கேற்பதன் காரணமாக அவரை வரவேற்கும் வகையில் பல்வேறு இடங்களில் பேனர்கள் போஸ்டர்கள் என ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு கட்டணமாக 2000 முதல் 5,000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது.

ரசிகர்களும் சன்னிலியோனை பார்க்க போகிறோம் என்ற காரணத்தினால் தாராளமாக இந்த நிகழ்ச்சிக்கு தேவையான டிக்கெட்டுகளை துணிந்து வாங்க ஆரம்பித்தார்கள். மேலும் மிக பிரம்மாண்டமாக டிக்கெட்  விற்றது மட்டுமில்லாமல் ஒரு சமூகத்தினர் சன்னிலியோன் நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

இதன் காரணமாக 100க்கும் குறைவான ரசிகர்களே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். அதுமட்டுமில்லாமல் சன்னி லியோன் ரசிகர்களை உற்சாகத்துடன் வரவேற்பார் என எண்ணிய நிலையில் சுமார் 2 மணி நேரம் மட்டும் சன்னிலியோன் பங்கேற்றார் என்பது  தெரியவந்துள்ளது.

sunny
sunny

மேலும் சன்னிலியோனுக்கு அங்கு பல்வேறு எதிர்ப்பு இருந்ததன் காரணமாக புதுச்சேரியை விட்டு இரவோடு இரவாக சென்றுவிட்டாராம்.  அது மட்டும் இல்லாமல் பல்வேறு ரசிகர்களும் அதிக அளவு முதலீடு போட்டு டிக்கெட் வாங்கியதன் காரணமாக பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Comment