சிவ பூஜையில் கரடி புகுந்தது போல் கோபி ராதிகா ஹனிமூன் சென்ற ரூமுக்குள் வந்த முக்கிய பிரபலம்.!

radika
radika

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அந்த வகையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள சீரியல் தான் பாக்கியலட்சுமி சீரியல் இந்த சீரியலில் கோபி பாக்யாவை விட்டுவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவரும் தற்பொழுது ஹனிமூன் செல்வதற்காக ஊட்டி சென்றுள்ளார்கள்.

தற்பொழுது பாண்டியன் ஸ்டோர் சீரியல் உடன் இணைந்து மெகா சங்கமாக ஒரு மணி நேரம் சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. எல்லோரும் வெளியே செல்லலாம் என காத்திருக்கும் பொழுது கோபியும் பாக்கியாவும் பின்பக்கத்தில் வர ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் சென்று விடுகிறார்கள். ஆனால் கண்ணன் தனக்கு தலை வலிக்கிறது என தன்னுடைய ரூமிலேயே படுத்து தூங்க மற்றவர்கள் அனைவரும் வெளியே ஜாலியாக பேசிக் கொண்டே செல்கிறார்கள்.

பாக்கியா தனத்திடம் முல்லை உண்டாக இருக்கிறாளா என கேட்க இல்லை அவர் சும்மாதான் இருக்கிறார் என சொல்ல கதிர் தற்பொழுது தங்களுடன் இல்லை என்ற விஷயத்தையும் கூறுகிறார். இந்த நிலையில் மீனா ஜீவா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு சினிமாவிற்கு போகலாம் என கூறுகிறார் ஆனால் இன்று கடையில் ஆள் இல்லை அதனால் நாளைக்கு போகலாம் என கூறுகிறார்.

பின்பு மூர்த்தி கோபி மச்சானுக்கு போன் போடலாம் என போன் போட போனை கோபி எடுக்கவில்லை இந்த நிலையில் அனைவரும் என்ன நடக்கப் போகிறது என்று பதட்டத்தில் இருக்க போன் எடுக்காததால் நிம்மதி அடைகிறார்கள் உடனே ரூமில் தலை வலிக்குது என படித்துக் கொண்டிருந்த கண்ணன் எழுந்து வெளியே வர அங்கு கோபியை பார்க்கிறார் உடனே கோபியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார்.

என்ன மாமா சர்ப்ரைஸ் கொடுக்க வந்தீங்களா என கோபியை பார்த்து கண்ணன் கேட்க கோபி அதிர்ச்சி அடைகிறார் அங்கு பெட்ரூம் சென்று கண்ணன் அராஜகம் செய்ய அப்பொழுது ராதிகாவை பார்த்து எங்க அக்காவுக்கு துரோகம் செஞ்சிட்டீங்களா உங்களை சும்மா விடமாட்டேன் என ஓடிச் சென்று பாக்யாவை கட்டிப்பிடித்து உங்களுக்கா இப்படி நடந்தது என  நீங்க வாங்க என சொல்லி அண்ணனை அழைத்து வர என கூறுகிறார் எழில் கண்ணனை தடுக்க முயற்சி செய்ய ஆனால் எதையும் கேட்காமல் மூர்த்தியை அழைத்துக் கொண்டு ஓடி வருகிறான்.

இந்த பக்கம் நடந்த விஷயத்தை கோபி மீது ராதிகா செம காண்டாக இருக்கிறார் கண்ணன் வேக வேகமாக ரூமுக்கு வந்து கதவை தட்டுகிறார் அப்பொழுது கோபி கதவை திறக்கிறார் உடனே கோபி எழிலை பார்த்து இதெல்லாம் உன்னுடைய வேலை தானா என எழிலை பார்த்து திட்டுகிறார். பிறகு கண்ணன் உள்ளே வந்து பாருங்க யாரு இருக்காங்க என தெரியும் என உள்ளே அழைத்து சென்ற ராதிகாவை காட்டுகிறார் மூர்த்தி அதிர்ச்சி அடைகிறார்.

நான் அவ்வளவு சொல்லியும் நீங்க ரெண்டு பேரும் கேட்கவே இல்லையா நீங்க இன்னும் திருந்தலையா இப்படி கட்டின பொண்டாட்டியை விட்டுவிட்டு இன்னொருவரை கூட்டிட்டு வந்து லாட்ஜில் ரூம் போட்டு தங்க உங்களுக்கு அசிங்கமா இல்லையா என மூர்த்தி கேட்க கோபி கோபமாக யார் அடுத்தவர்கள் என் பொண்டாட்டி நான் தொட்டு தாலி கட்டுன பொண்டாட்டி என சொல்லி ராதிகாவின் கழுத்தில் இருந்து தாலி எடுத்துக்காட்டுகிறார் இதனால் மூர்த்தி கண்ணன் இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

ஹனிமூன் க்கு சென்ற இடத்தில் கோபிக்கு இப்படி ஒரு அசிங்கம் நடந்ததை பார்த்த நெட்டிசன்  சிவ பூஜையில் கரடி புகுந்தது போல் இருக்கிறது என கலாய்த்து வருகிறார்கள்.