Baakiyalakshmi : பொட்டி படிக்கையுடன் வந்த ராதிகா.! உன் தலையெழுத்து எல்லாத்துக்கும் வடிச்சு போட்டு தான் ஆகணும் பாக்கியா.!

Baakiyalakshmi : பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்திய எபிசோடில் மாலினி ஜெனியின் குழந்தையை ஒலிய வைத்து விட்டு நாடகம் ஆடினார் அதனால் பிஞ்சு குழந்தையை விளையாட்டு பொருள் நினைச்சுக்கிட்டியா உனக்கு அறிவே இல்லையா உன் வேலையெல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோ இனி வீட்டு பக்கம் வந்தா அவ்வளவுதான் என்ன பாக்கிய விரட்டி விடுகிறார்.

இந்த சமயத்தில் கோபி படிக்காத முட்டுக்கட்ட மாதிரி அந்த பொண்ண இப்படி விரட்டி விட்டுட்டியே செழியனுக்கு ஏதாவது பிரச்சனை வந்தா என்ன செய்ய முடியும் அவன் வேலையில் ஏதாவது பிரச்சனை வந்துவிடாதா என பேச பாக்கியா எனக்கு சுத்தமா புடிக்கல அவளை அவளைப் பார்த்தாலே வெறுப்பா வருது என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் மாலினியை தேடி செழியன் போகிறார் அங்கு இனிமே என் வாழ்க்கையில நீ வரவே கூடாது நம்ம இனிமே சந்திக்கவே கூடாது என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது, மாலினி அப்படி எல்லாம் உன்னை விட முடியாது செழியா நீ எனக்கு வேணும் நீ பழையபடி என்னை காதலிக்கணும் நாம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும் இது நடக்கலைன்னா இந்த போட்டோவை எல்லாத்தையும் உங்க அம்மாவுக்கும் ஜெனிக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் ராதிகா கோபிக்கு கால் செய்கிறார் எங்க நினைப்பே உங்களுக்கு வரலையா இந்த பக்கமே ஆள காணும் என பேசிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் ஈஸ்வரி ஃபோனை புடுங்கி அவன் நிம்மதியாய் இருக்கிறது உனக்கு பிடிக்கலையா போன வை டி என திட்டுகிறார்.

உடனே ராதிகா அதிரடியாக முடிவு செய்து, வந்தால் கோபியுடன் தான் வருவேன் என பாக்யா வீட்டிற்கு ராதிகா போட்டி படுக்கையுடன் கிளம்புகிறார். பாக்யா வீட்டிற்கு வந்த ராதிகாவிடம் ஈஸ்வரி என்ன கோபி டிரஸ் கொண்டு வந்து கொடுக்க வந்தியா, வச்சிட்டு கிளம்பு என கூற கோபியை  என்னோட அனுப்பி வைங்க என ராதிகா கேட்கிறார். அதற்கு அதெல்லாம் முடியாது எனக் கூற அப்போ கோபி எங்கே இருக்கிறாரோ நானும் அங்க தான் இருப்பேன் என கூறிவிடுகிறார்.

ராதிகா, கோபி இருக்கும் ரூம்க்கு செல்கிறார் இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிகிறது இனிமேல்தான் பாக்கியலட்சுமி சீரியல் இன்னும் சூடு பிடிக்கப் போகிறது.