செழியனை பார்க்க மீண்டும் வீட்டிற்கே வந்த மாலினி.. பார்க்கக்கூடாததைப் பார்த்து கேட்க கூடாததை கேட்டு நொந்து போன பாக்கியா – பாக்கியலட்சுமி

baakiyalakshmi today episode october 14 : பாக்கியலட்சுமி இன்றைய சீரியலில்  கணேஷின் அப்பா, அம்மா கணேஷிடம் பேச வேண்டும் என அழைத்தார்கள் கணேஷ் வந்தவுடன் அவரிடம் வாப்பா வீட்டுக்கு போய் பேசிக்கலாம் எதுவா இருந்தாலும் எனக் கூறுகிறார்கள். இனிமே உங்கள நம்ப முடியாது எவ்வளவு பொய் சொல்லி இருக்கீங்க என்கிட்ட இருந்து அமிர்தாவை பிரிச்சு இன்னொருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க. அமிர்தாவும் நிலாவும் இல்லாம நான் இனிமே வீட்டுக்கே வரமாட்டேன் எனக் கூறுகிறார்.

அதேபோல் நானும் அமிர்தாவும் எப்படி எல்லாம் வாழனும்னு நெனச்சமோ அதே மாதிரி அமிர்தா நான் நிலா மூணு பேரும் வாழ்வோம் என கூறுகிறார். தயவு செஞ்சு இனிமே இங்க வராதீங்க என்னை தேடிகிட்டு என கணேஷ் தன்னுடைய அப்பா அம்மாவிடம் கூறிவிடுகிறார். அடுத்த காட்சியில் ஜெனி அமிர்தா, பாக்கியா, செழியன் என அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது பாப்பா வளர்ந்து விட்டதாக செழியன் சொல்ல அனைவரும் கிண்டல் அடிக்கிறார்கள்.

அந்த சமயத்தில் மாலினி வீட்டிற்கு வருகிறார் மாலினியை பார்த்த செழியன் முகம் வாடுகிறது. எங்கு நம்ம கூட்டு வெளிப்பட்டு விடுமோ என பயத்தில் இருக்கிறார் ஆனால் மாலினி வந்தவுடன் அடுத்த வாரம் ப்ராஜெக்ட் பைனலைஸ் இருக்கு அதுக்கு முடிக்க வேண்டிய வேலையை சீக்கிரம் முடிக்கணும் என கூறுகிறார் மாலினி நான் ஒரு வாரம் கழிச்சு தான் ஆபீஸ் வருவேன் என செழியன் கூற அதற்கு மாலினி ஜஸ்ட் ஒன் ஹவர் தான் இங்கேயே வேலைய முடிச்சிடலாம் என கேட்கிறார்.

ஆனால் செழியன் பேந்த பேந்த முழிக்கிறார் இவர் முழிப்பதை பாக்கியாவும் பார்த்து விடுகிறார். உடனே ஜெனி இடம் மாலினி உன் புருஷனை உன்கிட்ட இருந்து அப்படியெல்லாம் பிரிச்சிட மாட்டேன் என நாசுக்காக கூறுகிறார். ஜெனி நான் பாப்பாவ தூக்கிட்டு மேலே போறன் நீங்க வேலைய முடிச்சுடுங்க சீக்கிரம் எனக் கூற பாக்யாவும் டீ போடுவதற்கு கிச்சனுக்கு வருகிறார் அதேபோல் அமிர்தாவும் கிச்சனுகக்கு வந்து விடுகிறார்.

அந்த சமயத்தில் மாலினி ஒரு நாலஞ்சு கிளைன்ட் கால் பேசணும் இங்கே ரோடு சவுண்ட் கார் சவுண்ட் கேட்கும் அதனால வேற ஏதாவது இடம் இருக்கா என கேட்க பாக்யா உடனே பாட்டி ரூமுக்கு போங்க என கூறி விடுகிறார் உடனே இருவரும் பார்ட்டி ரூமுக்கு போய் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது மாலினி அப்படி எல்லாம் உன்னை சீக்கிரம் விட முடியாது எனக்கு எப்ப எல்லாம் தோணுதோ அப்ப கண்டிப்பா வந்து பார்ப்பேன் என கூறுகிறார்.

ஆனால் செழியன் இனிமே இங்கு வராத எனக் கூறுகிறார் அந்த நேரத்தில் பாக்யா காபி எடுத்துக் கொண்டு உள்ளே வருகிறார் அப்போது செழியன் முழிக்கிறார். பாக்கியாவுக்கு திடீரென கணேசன் அப்பா அம்மா கால் செய்கிறார் போனை எடுத்த பாக்கியா பேசிக் கொண்டிருக்கும் பொழுது உங்களிடம் தனியாக பேச வேண்டும் நீங்கள் வாங்க அமிதாவுக்கு தெரியக்கூடாது எனக்கு கூறுகிறார்கள்.

உடனே பாக்யா அமிர்தாவிடம் வெளியில கொஞ்சம் வேலை இருக்கு என சொல்லிவிட்டு கணேஷ் அப்பா அம்மாவை பார்க்க போகிறார் அவர்களை பார்த்து ஏன் இங்க உக்காந்து இருக்கீங்க வீட்டுக்கு வந்து இருக்கலாமே என கேட்கிறார். ஆனால் வீட்டில் பேசக்கூடிய விஷயம் இது கிடையாது எனக் கூறி செத்துப் போனதாக சொன்ன என்னுடைய மகன் கணேஷ் மீண்டும் வந்து விட்டான் என பாக்கியா தலையில் இடியை இறக்குகிறார்.

இதனால் பாக்கிய அதிர்ச்சி அடைகிறார் அதுமட்டுமில்லாமல் இதை யார் கிட்ட சொல்றதுன்னு தெரியல உங்க கிட்ட சொன்னாதான் ஒரு சொல்யூஷன் கிடைக்கும்னு சொல்றோம் என பேசுகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.