சமயம் பார்த்து பழிவாங்கிய ராதிகா.! எதற்கும் அசராமல் வெளுத்து விடும் பாக்கியா.! பரபரப்பான பாக்கியலட்சுமி எபிசோட்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா தன்னுடைய ஸ்கூலில் டாப் 5 மாணவர்களில் ஒருவராக வந்துள்ளார். அதனால் அவருக்கு பங்க்ஷன் நடத்துகிறார்கள் அதனை பார்ப்பதற்காக ராதிகாவிடம் பொய் சொல்லிவிட்டு வருகிறார்  பங்க்ஷன் முடிந்த பிறகு காரில் கிளம்புவதற்கு முன்பு மயூவை ஸ்கூலில் இறக்கிவிட்டு வரும் ராதிகாவிடம் கோபி மாட்டிக் கொள்கிறார்.

ராதிகா கோபியை பார்த்து இதுதான் நீங்க ஃபங்ஷனுக்கு போற லட்சணமா பொய் சொல்லி விட்டு இப்ப இங்க வந்து இருக்கீங்க என்ன கேள்வி கேட்கிறார். அதற்கு என்னுடைய மகள் இனியா ஸ்கூலில் ஐந்து மாணவர்களில் ஒருவராக வந்துள்ளார் அதனைப் பார்க்க நான் வந்தது ஒரு தப்பா என கேட்க அதெல்லாம் தப்பு இல்ல கோபி நான் உங்களை நம்பி கல்யாணம் பண்ணிகிட்டதுதான் தப்பு என கூறுகிறார் கோபி ராதிகாவை எப்படியோ சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு போகிறார்.

அடுத்த காட்சியில் பாக்கியா எதையோ யோசித்துக் கொண்டு காபியை  எடுத்துக் கொண்டு வருகிறார் அந்த சமயத்தில் ராதிகாவும் பாகியாவும்  நேருக்கு நேராக வருகிறார். இருவரும் இடித்து கொள்கிறார்கள் அப்பொழுது காபி கீழே கொட்டி விடுகிறது. இதனால் ராதிகா இதுதான் சமயம் என பாக்கியவை திட்டி தீர்க்கிறார் அதுமட்டுமில்லாமல் பாக்கியா கிளீன் செய்து விடுகிறேன் என மாப் எடுத்துக்கொண்டு வந்த கிளீன் செய்கிறார் அப்பொழுது பாக்யாவை கூப்பிட்டு ஒரு வேலையும் உனக்கு உருப்படியா செய்ய தெரியாதா? உன்னை நம்பி காண்ட்ராக்ட் கொடுத்ததற்கு எனக்கு தான் தலைவலி என கூறுகிறார்.

நானும் கவனிக்காம வந்துட்டேன் நீங்களும் கவனிக்காம வந்துட்டீங்க அதனால கீழே கொட்டிடுச்சு அதான் கிளீன் பண்ணிட்டேன் இல்ல மேடம் அப்புறம் என்ன மேடம் என கேட்கிறார். உன்னால தான் எனக்கு தலைவலி  முதல்ல கோபி என்னோட இருக்கார்னு இனியாவ அனுப்பி ஏதோ பிளான் பண்ணீங்க அப்புறம் நைசா இனியாவ கூட்டிட்டிங்க கோபியையும் இங்க வர வச்சுட்டீங்க பக்கவா மாஸ்டர் பிளான் போட்டு செமையா நடிக்கிறீங்க பாக்கியா எனக் கூற அதற்கு பாக்யா உங்க வாழ்க்கை உங்களை விட்டு போயிடுனு பயமாயிருக்கா ராதிகா என கேட்க ஆமா பயமா இருக்காதா உன்ன நெனச்சா பயமா தான் இருக்கு எனக் கூற.

அதற்கு பாக்யா அப்படி ஒரு பயம் இருந்தால் நீங்க பயப்படவே தேவையில்லை ஏன்னா நான் ஒன்ன தூக்கி போட்டுடா  திரும்பலாம் அதை ஏத்துக்க மாட்டேன் இனிமே இழக்க எனக்கு எதுவுமே இல்ல அப்படியே இருந்தாலும் நான் கவலைப்பட போறது இல்ல எனக்கு ஆயிரம் வேலை இருக்கு உங்கள மாதிரி படிச்சிருந்தா இதை மாதிரி பேசிக்கிட்டு இருக்கலாம் ஆனா எனக்கு கேன்டீன் வீடு என ரொம்ப பிசியா இருக்கேன் என பாக்யா ராதிகாவிடம் கூறுகிறார்.

அடுத்த காட்சியில் இனியா படித்துக் கொண்டிருக்கும் பொழுது கோபி வந்து இனியாவிடம் நீ ஸ்கூலில் ஐந்து மாணவர்களில் ஒருவராக வந்தது எனக்கு பெருமையா இருக்கு எங்க ஆபிஸில் போய் ஒவ்வொரு தர்கிட்டையும்  இந்த வீடியோவை போட்டு காமிச்சு இவதான் என் மகள் என பெருமையா பீத்திகிட்டேன் என கூறுகிறார். கோபி இனியவிடம் பேசிக் கொண்டிருக்கிறது பாக்யாவும் ராதிகாவும் பார்க்கிறார்கள் பின்பு பாக்கியா வெளியே வரும் பொழுது ராதிகாவை பார்க்கிறார் இருவரும் கிளம்பி விடுகிறார்கள்.

அடுத்த காட்சியில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் பிராட்டிக்ஸ் செய்து கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் இனியா எழுந்து ஏமா தனியா பேசிகிட்டு இருக்க என கேட்க நான் நாளைக்கு பேசுவதற்கு ப்ராக்டிஸ் செய்கிறேன் என கூற அதற்கு இனியா எப்படி பேசுவது என சொல்லிக்  கொடுக்கிறார்  இத்துடன்  இன்றைய எபிசோட் முடிகிறது.

Leave a Comment