மீண்டும் பாகியா வீட்டிற்கு வந்த பழனிசாமி.! உச்சகட்ட கோவத்தில் கோபி..! பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் சிக்கன் குழம்பு நன்றாக இருந்ததால் வாசனை பிடித்துக் கொண்டே கோபி கீழே வருகிறார். ஆனால் அதை  சமைத்தது பாக்யா என தெரிய வர ராதிகா செம காண்டாகி பூரி கட்டையால் கீழே அடிக்கிறார். அதன் பிறகு ரூமிற்கு வந்த ராதிகா கோபியிடம் நான் சமைத்த நல்லா இல்லையா என சண்டை போடுகிறார். உடனே கோபி நீ சமைக்கிற எனக்காக சமைக்கிற என்று தான் ஆர்வத்தோடு வந்தேன் ஆனால் பாக்கிய அந்த இடியட் சமைச்சது எனக்கு எப்படி தெரியும் என கூறி கோபி தப்பித்து விடுகிறார்.

பிறகு ராதிகா உங்க வீட்ல எப்ப பார்த்தாலும் என்னை தான் திட்டுறாங்க என கேட்க யாரு என்ன பேசினாங்க நான் கேட்கிறேன் என கேட்க கோபியிடம் பாக்கியா தான் அப்படி என கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் எப்ப பாரு அவங்க பின்னாடியே நீங்க சுத்துறீங்களா நான் இங்க இருக்கும்போது எதுக்கு பாக்கி பின்னாடி போறீங்கன்னு என்னை பார்த்து கேட்கிறாள். அவங்க கேட்பதுல தப்பு என்ன இருக்கு நீங்க அப்படித்தானே நடந்துக்கிறீங்க என ராதிகா கூறுகிறார்.

பாக்யாவை பொண்ணு பார்க்க வந்த உங்களுக்கு என்ன நீங்க ஏன் குட்டி போட்ட பூனை மாதிரி சுத்திகிட்டே இருந்தீங்க நான் என்னமோ உங்களை பாக்கியா கரெக்ட் பண்ண போறான்னு நான் நினைச்சுட்டு இருந்தேன் ஆனா நீங்கதான் அவளை இன்னும் மறக்கல பாக்கிய நினைப்பாவே இருக்கீங்க என ராதிகா கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் கோபியை.

அந்த இடியட்டுக்கு அவ்வளவு தைரியம் வந்துருச்சா நான் போய் கேட்கிறேன் என கோபி கீழே போகிறார் அந்த சமயத்தில் செல்வி மற்றும் பாக்கிய இருவரும் சமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது கோபி கிழே  வருகிறார் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா ராதிகாவிடம் இப்படி கேட்டிருப்பாய் என கேட்க உடனே பாக்கியா நீங்க ரெண்டு பேரும் தான் தேவை இல்லாம என் வழியில் குறுக்க வரீங்க சும்மா சும்மா குறுக்க வந்தீங்கன்னா நறுக்கு நறுக்குன்னு வெட்டுவேன் என்பது போல் சைகையாலையே கூறுகிறார்.

ஆமா உங்களுக்கு எத்தனை பிசினஸ் இருக்கு ஒரே ஒரு பிசினஸ் தான ஆனால் எனக்கு மசாலா கம்பெனி, கேண்டின், கேட்டரிங் என மூன்று பிசினஸ் இருக்கு உங்களை விட அதிகமான சம்பாதிக்கிறேன் எனக்கு உங்க கிட்ட சண்டை போடலாம் நேரம் இல்லை. நீ ரொம்ப பேசுற பாக்கியா என கோபி கூற நான் அப்படி தான் பேசுவேன் இப்ப நீங்க இங்க நின்னு பேசிட்டு இருக்கிறது உங்கள் வைஃப் பார்த்தால் என்ன நடக்கும்னு தெரியுமில்ல போங்க சார் போங்க எனக் கூறுகிறார்.

எதுக்கு நீங்க பழனிச்சாமி சார் வீட்டுக்கு எதுக்கு போனீங்க என பாக்கியா கேட்க அதற்கு பாக்யா நீங்க போனது தப்பு இல்ல அவரு என்கிட்ட வந்த சொல்றது தப்பா என கேள்வி கேட்கிறார். எனக்கு புடிச்சவங்க கிட்ட நான் பேசுவேன் பழகுவன் நான் என்ன வேணாலும் பண்ணுவேன் நீங்க யாரு என்ன கேள்வி கேட்க என கிழித்து தொங்க விடுகிறார் .

ராதிகாவை பற்றி நீயும் தான் கல்யாணத்துக்கு முன்னாடி திட்டின என கோபிக் கூற  நீங்க பண்ண துரோகமும் இதுவும் ஒண்ணா என கேட்கிறார் பாக்யா. நான் பண்றது சரியா தப்பா என்று கேட்க நீங்க யாரு என கிழித்து தொங்க விடுகிறார் பாக்கியா. அடுத்த காட்சியில் அமிர்தா அப்பா அம்மாவுக்கு கால் செய்கிறார் அவருக்கு அடிபட்டுவிட்டதாக அவரின் அம்மா கூறுகிறார் உடனே எழில் வருகிறார் நடந்ததை கூற நாம் போய் பார்த்துவிட்டு வரலாம் என இருவரும் கிளம்பி விடுகிறார்கள்.

இனியா படித்துக் கொண்டே இருக்கிறார் அப்பொழுது ஜெனி சொல்லிக் கொடுத்து கொண்டு இருக்க பாக்கியா எக்ஸாம் டயத்துல உனக்கு படிச்சதெல்லாம் மறந்தது போல் இருக்கும் ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் முதலில் நல்லா தெரிந்த கொஸ்டின் எழுதிவிட்டு அதை சரி பாரு என பாக்கிய கூறுகிறார். அந்த சமயத்தில் கோபி வந்து எக்ஸாம் பத்தி எல்லாம் பயப்படாத எல்லாரும் அப்படித்தான் சொல்லுவாங்க நீ பாட்டு ஜாலியா இருந்த இந்த எக்ஸாம் ஒன்னும் உன் வாழ்க்கையை தேர்வு செய்யாது என கோபி கூறுகிறார்.

அடுத்த நாள் காலையில் இனியா பதட்டத்துடன் படித்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ராமமூர்த்தி எதற்கு பயப்படுற ஒரு தமிழ் ரிட்டயர்மென்ட் ஆசிரியர் பேத்தியா இப்படி பயப்படுவது ரொம்ப கவலையா இருக்கு என ராமமூர்த்தி பேசிக்கொண்டிருக்கிறார். அப்பொழுது பாக்யா டிபன் எடுத்து வைக்கிறேன் சாப்பிடு என இனியா விடம் கூற பத்து நிமிடம் கழித்து சாப்பிடுகிறேன் என கூறுகிறார் அந்த சமயத்தில் பழனிச்சாமி வீட்டிற்கு வருகிறார்.

இனியாவை பார்த்து நீ எக்ஸாமுக்கு கிளம்பி இருப்பியோ என பயந்து கொண்டே வந்தேன் இந்த உனக்காக என்னுடைய கிப்ட் என விலை உயர்ந்த பேனாவை கொடுக்கிறார். இதை பார்த்துக் கொண்டிருந்த கோபி முதலில் பாக்கியாவை கரெக்ட் செஞ்சான் இப்ப குழந்தைகிட்ட வரன் என கோபத்துடன் இருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment

Exit mobile version