ஒரே ஒரு கேள்வி கேட்டு பாக்யாவிடம் அரை வாங்கிய எழில்.! பெத்த புள்ள கேட்க வேண்டிய கேள்வியா இது.! பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்.

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் கோபி பழனிச்சாமி வீட்டிற்கு வந்துள்ளார் அது மட்டும் இல்லாமல் பாக்கியாவிடம் பேசக்கூடாது எனவும்  சூப்பர் மார்க்கெட்டில் பேசுவது, இங்கிலீஷ் கிளாசில் பேசுவது தேவை இல்லாம பொண்ணு பாக்க வரக்கூடாது என கேட்க பொண்ணு மூக்கு முழியும் லட்சணமாய் இருந்தால் நான்கு பேர் பார்க்க வரத்தான் செய்வாங்க எனக் கூற கோபி எங்க குடும்ப நிம்மதியா கெடுக்கிற மாதிரி ஏதாவது பிளான் இருந்தா அதை அப்படியே விட்டுடுங்க என கூற அதற்கு பழனிச்சாமி நீங்க தான் குடும்ப நிம்மதியை கெடுக்குறீங்கன்னு எல்லாரும் சொல்றாங்க எனக் கூறுகிறார்.

கோபியிடம் இங்கிலீஷ் வார்த்தையை கேட்டுக் கொண்டு மைண்ட் யுவர் ஓன் பிசினஸ் என கூறி விடுகிறார் இதற்கு இடையில் பவுன்சர்கள் கோபியை அவ்வப்பொழுது வந்து பார்க்க கோபி கொஞ்சம் நடுநடுங்குகிறார். வெளியே வந்து கோபி புலம்புகிறார் அப்பொழுது எழில் எதர்ச்சியாக வர இருவரும் மோதி கொள்கிறார்கள் நீங்க இங்க என்ன பண்றீங்க என்ன எழில் கேட்க நீங்கதான் எதுவுமே கேட்க மாட்டேங்கறீங்க அதனால தான் நான் தைரியமா கேட்டுட்டு போறேன் வான் பண்ணிட்டு போறேன் என கூறுகிறார் கோபி.

என்ன சொல்றீங்க நான் கேட்பன் ஆமா பாக்கியோட பேசக்கூடாது பாக்யாவ பொண்ணு பாக்க வந்தது எல்லாத்தையும் கேட்டுட்டு தான் போறேன் எனக் கூறுகிறார் அதற்கு எழில் அம்மாவை தான் டைவர்ஸ் பண்ணிட்டீங்களா அப்புறம் எதுக்கு இந்த வேலை அம்மாவுக்கு புடிச்சிருந்தா கண்டிப்பா கல்யாணம் பண்ணி வைப்பேன் என எழில் கூறி விடுகிறார். அடுத்த காட்சியில் எழில் பழனிச்சாமியை பார்க்க இருவரும் பேசிக் கொள்கிறார்கள் அப்பொழுது கண்டிப்பாக நீங்க இந்த படத்தை வெற்றிகரமா முடிப்பீங்க என பழனிச்சாமி கூறுகிறார் ஆனாலும் எழில் பழனிசாமியிடம் அப்பா என்ன பேசி இருந்தாலும் அதற்கு சாரி என கூறுகிறார்.

கண்டிப்பா நல்லதா பேசி இருக்க மாட்டாரு என கூறி சாரி என்று சொல்லுகிறார். பிறகு பழனிச்சாமி மற்றும் எழில் சினிமா பிரபலத்தை பார்க்க செல்கிறார்கள் பார்த்த பிறகு வீட்டிற்கு எழில் வருகிறார் வீட்டில் இந்த சினிமா பிரபலத்தை பார்ப்பதே மிகவும் கடினம் ஆனால் அவர் கூட உட்கார்ந்து லஞ்ச் சாப்பிட்டேன் ஸ்கிரிப்ட் டிஸ்கஸ் பண்ணினேன் அவருக்கும் ஓகே என கூறிவிட்டார் என்பது போல் எழில் கூற வர்ஷினியின் அப்பா ஏதாவது பிரச்சனை பண்ணுவாரா என கேட்க அதெல்லாம் எதுவும் நடக்காது என கூறுகிறார்.

பிறகு பழனிச்சாமி வீட்டிற்கு அந்தாலும் வந்தார் என கோபியை கூற உடனே யார் என பாக்யா கேட்கிறார் அதான் கோபி எனக் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் அவர் உன்ன பொண்ணு பாக்க வந்ததா நினைச்சுக்கிட்டு ஏதோ பேசி உள்ளார் நானும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டேன் எனக் கூறுகிறார் அதன் பிறகு பாக்கியவிடம் உங்களுக்கு பிடிச்சிருந்தா கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கலாம் எனக் கூற பாக்கியா அதிர்ச்சியடைந்து எழிலை ஓங்கி ஒரு அறை விடுகிறார்.

அதுமட்டுமில்லாமல் நீ எப்படி இந்த மாதிரி கேட்கலாம் என கோபத்துடன் பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் இந்த விஷயத்துக்காக உன்னை மன்னிக்கவே மாட்டேன் எனவும் கூறுகிறார் உடனே உன் மேல்  சத்தியமா சும்மா தான் கேட்டேன் என கூறி சமாளித்து விடுகிறார்.  செழியன் மிகவும் டயர்டாக வந்து உட்காருகிறார் அதன் பிறகு கோபியும் வருகிறார். அப்பாவுக்கு ஏன்இந்த தேவையில்லாத வேலை அந்த பழனிச்சாமிக்கு எதுக்கு பொண்ணு பாக்குறாரு என கோபி கேட்க அந்த தம்பி நல்ல தம்பி தங்கமான தம்பி என ஈஸ்வரி கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment