கோர்ட்டில் காலில் விழாத குறையாக கண்ணீருடன் கும்பிட்டு மன்னிப்பு கேட்கும் செழியன்.! ஜெனி எடுக்கபோகும் அதிரடி முடிவு..

Baakiyalakshmi : பாக்கியலட்சுமி இன்றைய ப்ரோமோவில்  கோர்ட்டில் அனைவரும் உள்ளனர்.அப்போது செழியன் ஜெனிஃபர் இவர்களின் கேஸ் வழக்குக்கு வருகிறது. ஜெனியின் வக்கீல் யுவர் ஆனர் என்னோட கிளைண்டுக்கு செழியன் உடன் சேர்ந்து வாழ கொஞ்சம் கூட விருப்பமே இல்ல, செழியனை பார்த்து இவர் மனைவியா மட்டும் இல்ல ஒரு மனுஷியாக கூட ஜெனியை  மதிக்கல என ஜட்ஜிடம்  கூறுகிறார்.

உடனே அதற்கு ஜட்ஜ் செழியனை  பார்த்து இதற்கெல்லாம் நீங்க என்ன பதில் சொல்றீங்க எனக் கேட்கிறார். அதற்கு செழியன் நிறைய தப்பு பண்ணி இருக்கேன் சார் ஜெனி என் கூட இருக்குற வரைக்கும் அவளோட அருமை எனக்கு தெரியல சார் நான் இவ மேல உயிரே  வச்சிருக்கேன் சார் தயவு செய்து என்னை மன்னித்துவிடு என ஜெனியை பார்த்து அழுது கொண்டே அனைவரும் முன்பும் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கிறார்.

அதோடு இன்றைய பிரமோ முடிவு அடைகிறது மேலும் இந்த வாரம் இவர்கள் இருவரும் சேருவார்களா? இல்லை பிரிவார்களா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஜெனி மணம் மாறி செழியனை மன்னித்து ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி இருந்தாலும் இந்த வாரம் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.