உன் புள்ளையோட வாழ்க்கைய மட்டும் பாக்கிறியே பாக்கியா.. கணேசன் பாவம் இல்லையா – பாக்கியலட்சுமி

Baakiyalakshmi serial : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி காபி குடிச்சிட்டு நாம பார்க்குக்கு போகலாம் என குழந்தை இடம் கூறிக் கொண்டிருக்கிறார். உடனே பாக்யா பார்க்குக்கு போக வேண்டாம் அங்கு கொசு தொல்லைகள் அதிகமாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல் இப்ப ஏதேதோ வியாதி வருகிறது அதனால் போக வேண்டாம் எனக் கூறுகிறார்.

நீ பேசாம கொசு மருந்து அடிக்க சொல்ல வேண்டியது தானே என ஈஸ்வரி கேட்க அதையும் சொல்லியாச்சி அத்த கண்டிப்பா அடிச்சிடுவாங்க என பேசுகிறார். அடுத்த காட்சியில் ஈஸ்வரி சரி நான் கோவிலுக்கு போறேன் நீ வரியா பாக்கியா எனக் கேட்க இல்ல அத்த  எனக்கு நிறைய வேலை இருக்கு எனக் கூற உடனே அமிர்தாவிடம் நீ வரியா அமிர்தா என கேட்க நான் வரேன் பாட்டி என கூறுகிறார்.

லியோ படத்தில் VFX வைத்து உருவாக்கிய கழுதைப்புலி கதாபாத்திரத்தில் நடித்தவர் இவரா.? புகைப்படம் உள்ளே

ஆனால் பாக்கியா அமிர்தா போனால் கணேஷ் பார்த்து விடுவார் அதன் பிறகு எழில் வாழ்க்கை அவ்வளவுதான் என முடிவு செய்து அமிர்தா நீ எங்கேயும் போகக்கூடாது இங்கேயே இரு நிலா பாப்பாவ பார்த்துக்கணும் ஜெனியை பார்த்துக் கொள்ள வேண்டும்  எனக்கு கூறுகிறார். அப்ப கோவிலுக்கு யார் தான் வரீங்க என ஈஸ்வரி கேட்க நான் வரேன் என பாக்யா கூறுகிறார்.

அடுத்த காட்சியில் கோபி தன்னுடைய நண்பரை வரச் சொல்லி அவரிடம் புலம்பி கொண்டிருக்கிறார் உடனே அவரின் நண்பர் உனக்கு என்ன ரெண்டு பொண்டாட்டி ஜாலியா இருக்க என பேச உடனே கோபி கோவப்பட்டு என்னை பார்த்தால் உனக்கு நக்கலா தெரிகிறதா நான் எவ்வளவு கஷ்டத்துல இருக்கேன் தெரியுமா என பேசுகிறார்.

அது மட்டும் இல்லாமல் கோபி என்கிட்ட சுத்தமா காசே கிடையாதுடா இங்க பாரு ஆறு கார்டு இருக்கு எல்லாமே கிரெடிட் கார்டு இன்னும் கட்டவே இல்ல இந்த நேரத்துல பார்த்து ராதிகா அவங்க அம்மாவுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸா கிப்ட் வாங்கி கொடுக்கணும் நாலு சவரன் கேட்கிறார் அதுக்கு நாலு லட்ச ரூபாய் நமக்கு தேவை நான் எங்க போவேன் என பேச உடனே கோபியின் நண்பன் ராதிகாவிடம் சொல்ல வேண்டி தானே என கூறுகிறார் அதற்கு சொன்னால் அவ்வளவுதான் எனக்கு தான் அசிங்கம் என பேசுகிறார்.

இப்படியே பேசிக் கொண்டிருக்கும் பொழுது நீ எனக்கு ஒரு ரெண்டு லட்ச ரூபா கொடுத்தா ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் என பேச உடனே கோபியின் நண்பன் துண்ட காணோம் துணையை காண என ஓட்டம் எடுக்கிறார் அது மட்டும் இல்லாமல் சாப்பிட்டதற்கு பிள்ளை நீயே கட்டிக் கொள் என சொல்லிவிட்டு ஓடிவிடுகிறார். கோபி வீட்டிற்கு வந்தவுடன் ஷாப்பிங் போகலாமா என கேட்க எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன் என கூறுகிறார்.

கண்ணீர் விட்டு அழுத மாயா.. காலில் விழுந்த கூல் சுரேஷ்.! தலைவரே அதுக்குன்னு இப்படியா அடிமட்டத்துக்கு இறங்குவிங்க.

மற்றொரு பக்கம் கோவிலுக்கு சென்ற ஈஸ்வரி பாக்யா நடந்த அனைத்தையும் தன்னுடைய அத்தை ஈஸ்வரியிடம் கூறிவிடலாம் நம்ம மனசுக்குள்ளேயே வச்சிருந்தா எந்த ஒரு சொல்யூஷனும் கிடைக்காது என பேசுகிறார். ஆனால் அதற்கு முன்பு ஈஸ்வரி ஏன் ஒரு மாதிரியா இருக்க என கேட்க ஏதாவது சொல்லி மழுப்புகிறார் அதற்கு எழில் அமிர்தாவை திருமணம் செஞ்சிருக்க கூடாது என பேசுகிறார் அதனால் பாக்கியா இப்போது சொன்னால் அத்த கோபப்படுவார்கள் தேவையில்லாம பிரச்சனை அதனால் சொல்ல வேண்டாம் என பாக்கியா மறைத்து விடுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.