வீட்டிற்கு வந்து பெல் அடித்தவுடன் ராதிகாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி.! கோபியை தனியாக அழைத்து சென்று எப்பொழுது ராதிகாவை திருமணம் செய்வீங்க என்று கேட்கும் ராதிகாவின் அம்மா மற்றும் அண்ணன்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் முக்கிய சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி.  தற்பொழுது கோபி மற்றும் ராதிகா இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வருகிறார்கள் மேலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கடிதம் எழுதி கையெழுத்துப் போட்டுள்ளார்.

கோபி போலீசார்கள் கையெழுத்து போட வேண்டும் என்று சொன்னவுடன் எந்த தயக்கமும் இன்றி கையெழுத்து போட்டார்.  பிறகு ராதிகா தயங்கி வந்ததால் அவரை வெளியில் அழைத்துச் சென்ற அவருடைய அம்மா மற்றும் அண்ணன் மயூரி உன்னோடு இருக்கணுனா கையெழுத்துப் போட்டு தான் ஆக வேண்டும் என்று கூறுகிறார்கள்.

பிறகு வேறு வழியில்லாமல் ராதிகாவும் கையெழுத்து போடுகிறார். பிறகு கோபியும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த பிறகு போலீஸ் ராஜேஷ் இனி நீங்கள் எந்த விஷயத்தையும் கோர்ட்டில் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீஸ் இதனை உறுதிப்படுத்தும் வகையில் மயூரியிடம் கோபியை போன் போட்டு பேச சொன்னார்கள்.  இப்படிப்பட்ட நிலையில் பாக்கியம் மையூரிடம் பேசி அவரை சமாதானப்படுத்துகிறார். உன்னை உங்க அம்மா கூட சீக்கிரத்தில் அவங்க அப்பாகிட்ட அனுப்பி வைத்திட மாட்டாங்க கண்டிப்பா நீ அம்மா கூட தான் இருப்பார் பயப்படாத என்று ஆறுதல் கூறுகிறார்.

பிறகு மயூரிக்கு பாக்கியா பால் காட்சி கொடுக்கிறார்.  இந்நிலையில் ராதிகாவை அவரது அண்ணனும், அம்மாவும் வீட்டுக்குப் போகச் சொல்லி அனுப்பி வைத்தனர்.  அங்கு வந்து பெல் அடிக்க பாக்கியா கதவைத் திறக்கிறார் இதனை பார்த்ததும் ராதிகா அதிர்ச்சியடைகிறார்.

பிறகு எந்த பிரச்சனையும் இல்லை நீங்க ஏன் மையூவை தனியா விட்டுட்டு போன எனக்கு போன் பண்ணி இருந்தா நானே வந்து பார்த்துட்டு இருப்பேன்ல, இப்படி ஃப்ரெண்ட்ஸா இருந்துக்கிட்டு ஓரு உதவி செய்து கொள்ளலாம்ல,  நான் ஒருதி இருக்கிறது உங்களுக்கு மறந்து போச்சா.?  இங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க எல்லாம் சரியாயிடும் நீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க என கூறுகிறார்.

இன்னொரு பக்கம் கோபியை ராதிகாவின் அம்மா மற்றும் அண்ணன் தனியாக அழைத்து சென்ற போலீஸ் கையெழுத்து போட்டது எல்லாம் இருக்கட்டும் நீங்க என்ன முடிவு இருக்கீங்க எனக் கேட்டு வருகிறார்.  கோபி அதற்கு யோசிக்கிறார் இதுதான் இங்கே எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment