பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரபல நடிகை திடீர் விலகல்.? இதோ அவரே சொன்ன காரணம்

விஜய் தொலைக்காட்சியில் பத்துக்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது அவற்றில் பல சீரியல்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக பார்க்கப்படுகிறது அந்த வகையில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் பாக்கியலட்சுமி சீரியல்.

இந்த சீரியல் குடும்பம் பங்கான சீரியல் ஆகும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுசித்ரா இவர் திடீரென சீரியலில் இருந்து விலக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி காட்டுத்தீ போல் பரவி வருகிறது அது குறித்து சுஜித்ரா விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

நடுத்தர குடும்ப பெண்ணின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பப்பட்டு வரும்  சீரியல் தான் பாக்கி லட்சுமி சீரியல். இந்த சீரியலில் கதாநாயகியாக பாக்கியா ஒரு இல்லத்தரசியாக தன்னுடைய குடும்பத்தை கவனித்து வருகிறார் தன்னுடைய குடும்பத்தை எப்படியாவது உயர்த்த வேண்டுமென தன்னால் முடிந்த தொழிலை செய்து வருகிறார்.

ஆனால் அவரின் கணவர் தன்னுடைய அப்பா அம்மா மனைவி பிள்ளைகள் என யாரையும் பார்க்காமல் தன்னுடைய சுயநலத்தை மட்டுமே பார்க்கிறார் அதனால் தன்னுடைய மனைவியை விட்டுவிட்டு காதலி ராதிகாவை திருமணம் செய்ய நினைக்கிறார் அதனால் பல சித்து வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறார்.

பாக்யாவின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு விவாகரத்து வரை சென்றவர் கோபி ஆனால் இதையெல்லாம் எதுவுமே தெரியாமல் பாக்கியா குடும்பத்திற்காக மாடாக உழைத்து வருகிறார். இந்தநிலையில் வருகின்ற எபிசோடில் பாக்கியா விவாகரத்து என்றால் சாதாரணமாக இருக்கிறதா என தன்னுடைய மகனை திட்ட கோபிக்கு தன்னை திட்டுவது போல் இருக்கிறது.

அதனால் இனி கோபி பாக்கிய விடம் கவனமாக இருப்பார் என தெரியவருகிறது. இப்படி பரபரப்பாக சீரியல் சென்று கொண்டிருக்கும் நிலையில் பாக்கியாவாக நடித்துவரும் சுசித்ரா சீரியல் விட்டு விலக இருப்பதாக சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல் செய்தி பரவி வருகிறது இது பற்றி அவரே ஒரு விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார் அதில் அப்படி ஒன்றும் இல்லை நான் இப்பொழுது கூட சீரியல் சூட்டிங்கில் தான் இருக்கிறேன் சீரியல் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது சீரியல் தொடர்பான புரோமோஷன்  வேலைகள் பிஸியாக இருக்கிறது.

நான் எப்படி சீரியலை விட்டு விலகுவேன் அது நடக்குமா ஒரு பொய்யான செய்தி இது எனவும் தெரிவித்துள்ளார். இதனால் பாக்யலக்ஷ்மி சீரியல் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

Leave a Comment