இனியாவை கண்டிக்கிறேன் என கோபி தலையில் இடியை இறக்கிய ராதிகா.! ஒன்னும் தெரியாத பாப்பா போல் ராதிகாவுக்கு லந்து கொடுக்கும் பாக்கியா… பரபரப்பாகும் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்…

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த சீரியலை காண அதிக ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் நிலையில் நேற்றைய எபிசோடில் இனியா தன்னுடைய பிரண்டுடன் பேசிக்கொண்டே சைக்கிளை தள்ளிக் கொண்டு வருகிறார் அதைப் பார்த்த ராதிகா காட்டு கத்து கத்துகிறார் ரோட்டில்.

உடனே சைக்கிளை விட்டு விட்டு  காரில் போகலாம் எனக் கூற இனியா நான் எதுக்கு கார்ல வரணும் நான் சைக்கிளில் வருகிறேன் என கூறுகிறார். உடனே ராதிகா டென்ஷன் ஆகி காரில் செல்கிறார். இனியா சரணுடன் பேசிக் கொண்டு வரும்பொழுது இவங்க எனக்கு அம்மாவே கிடையாது இவங்க ஏன் என்னை கேட்கணும் என கூறிக் கொண்டிருக்கிறார். பிறகு ராதிகா வீட்டிற்கு செல்கிறார் அங்க கோபி உட்கார்ந்து போனை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

வீட்டிற்கு வாந்த ராதிகா கோபியை பார்த்து எப்பொழுது வந்தீர்கள் கோபி காபி போட்டு கொடுக்கட்டுமா என கேட்க நான் காபி போட்டு குடித்து விட்டேன் எனக் கூறிக் கொண்டிருக்கிறார். உடனே தாத்தாவை பார்த்து ராதிகா உங்களுக்கு காபி வேணுமா எனக் கேட்க வேண்டாம் என அவரும் கூறுகிறார் பின்பு  வாசலை ராதிகா பார்த்துக் கொண்டிருக்கிறார் இனியா இன்னும் வரவில்லை என கோபியிடம் கூறிக் கொண்டிருக்க டியூஷன் போயிருக்கா வந்துருவார் என கோபி கூறுகிறார்.

உடனே இனியா வந்ததும் ஏன் இவ்வளவு லேட் என் பின்னாடி தானே வந்துகிட்டு இருந்தாய் இனி நீ சைக்கிலில் போகக்கூடாது என அதற்றுகிறார் நான் சைக்கிளில் தான் போவேன் என இனியா அடம் பிடிக்கிறார். உடனே ராதிகா இனி சைக்கிளில் போக வேண்டாம் ஆட்டோ ரெடி பண்ணி விடலாம் என கோபி தலையில் இடியை இறக்கிறார் ராதிகா ஏன் என்றால் ஏற்கனவே பட்ஜெட் தாங்காமல் கோபி புலம்பி கொண்டிருக்க இப்படி ஒரு வார்த்தையைக் கேட்டு கோபி அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்.

மற்றொரு பக்கம் பாக்கியா கேக் செய்வதற்காக அனைத்தையும் ரெடி பண்ணி வைத்துக் கொண்டு இருக்க அப்பொழுது இங்கிலீஷ் கிளாசில் படிக்கும் பழனிச்சாமி கால் செய்து கேக் எப்படி செய்வது என எக்ஸ்பிளைன் செய்கிறார் கேக் ரெடி ஆனதும்  அனைவரும் சாப்பிட்டு விட்டு அருமையாக இருப்பதாக கூறியதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் பாக்கியா.

பின்பு கேண்டினில் பாக்யா கேக்கை கொடுக்க அனைவரும் சாப்பிட்டு விட்டு அருமையாக இருப்பதாக கூறுகிறார்கள் உடனே அனைவரும் கேக் செய்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும் அதற்கு நான் தயார் செய்கிறேன் என தன்னுடன் வேலை செய்யும் நபர்களிடம் கூறுகிறார் பாக்யா. பின்பு அனைவரும் போய்விட்டார்கள் திடீரென ராதிகா அங்கிருந்து வருகிறார் இன்னும் கேக் ரெடியாகவில்லையா என கேட்கிறார் அதற்கு கேக் எவ்வளவு செய்தும் சரியாக வரவில்லை என ராதிகாவிற்கு லந்த்து கொடுக்கிறார் பாக்யா.

பின்பு ராதிகா சென்றவுடன் பாக்யா கிளாஸிற்கு செல்கிறார் அங்கு கேக்கை கொடுத்தவுடன் அனைவரும் சாப்பிட்டுவிட்டு அற்புதமாக இருப்பதாக பாராட்டுகிறார்கள் மிகவும் சுவையாக இருப்பதாகவும் கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment