படையப்பா நீலாம்பரியாக மாறிய பாக்கியா.. தலையில் இடி விழுந்தது போல் உறைந்து போய் நிற்கும் கோபி மற்றும் ஈஸ்வரி..

பாக்கியலட்சுமி சீரியலில்  கோபி மீண்டும் அப்பாவாகி விட்டார் அதனால் ராதிகா சந்தோஷப்படுகிறார் ஆனால் கோபிக்கு எப்படி வீட்டில் சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார் ஒரு வழியாக தன்னுடைய அம்மா ஈஸ்வரிடம் கோபி கூறிவிடுகிறார் ஆனால் ஈஸ்வரி ராதிகாவிடம் சென்று இப்பொழுது இந்த குழந்தை தேவையா என கேட்க குழந்தை பெத்துக்கணுமா வேண்டாமா என்பதை நான் முடிவு செய்து கொள்கிறேன் இதில் நீங்கள் தலையிட வேண்டாம் என மூஞ்சில் எடுத்தது போல் கூறி விடுகிறார்.

வாய் பேச முடியாமல் வந்து விடுகிறார் ஈஸ்வரி அதேபோல் பாக்யாவிற்கும் ராதிகா கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது அதனால் கோபி மீது செம காண்டில் இருக்கிறார் இந்த வயதில் இது தேவையா என்பது போல் பார்க்கிறார் அது மட்டும் இல்லாமல் இந்த விஷயத்தை எப்பொழுது சொல்வார்கள் என பாக்கியா காத்து கொண்டு இருந்தார் இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில்.

ராதிகா வீட்டில் உள்ள அனைவரையும் ஹாலுக்கு கூப்பிடுகிறார் அப்பொழுது கோபி உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் என ராதிகா பேச்சு ஆரம்பிக்கிறார் உடனே செழியன் எதுவாயிருந்தாலும் சொல்லுப்பா எனக் கூறுகிறார் அதே போல் எழிலும் ஏதாவது சொல்ல விரும்புனீங்கன்னா சொல்லுங்க இல்லனா எல்லாரும் கிளம்பலாம் என பேசுகிறார் உடனே ஈஸ்வரி அதெல்லாம் ஒன்னும் கிடையாது எல்லாரும் கிளம்புங்க என பேசி விடுகிறார்.

ஆனால் ராதிகா எல்லாரும் இந்த இடத்தை விட்டு நகரவே கூடாது கோபி நீங்க சொல்லுங்க என சொல்ல கோபி முழித்துக் கொண்டிருக்கிறார் ஆனால் படையப்பா நீலாம்பரி போல் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு பாக்கிய எதையோ சாப்பிட்டு கொண்டு வேடிக்கை பார்க்கிறார் உடனே எழுந்து வந்து இந்த சின்ன மேட்டருக்கு எதுக்கு இவ்வளவு பில்டப் பண்ணுகிறீர்கள், நானே சொல்றேன் என கோபி உங்க அப்பா மீண்டும் அப்பாவாகி விட்டார் என கூறுகிறார்.

இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் இத்துடன் ப்ரோமோ முடிகிறது.

Exit mobile version