பாக்கியாவை கீழ்த்தரமாக பேசிய கோபி.! அப்பா என்று கூட பார்க்காமல் அடிக்க போன எழில் மற்றும் செழியன்.! அசிங்கப்படும் ராதிகா.!

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த சீரியலில் இன்றைய எபிசொட்டில் ஈஸ்வரி, ராமமூர்த்தி, பாக்கியா, எழில் என அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது எழில் பாட்டியின் காலை அமுக்கிக் கொண்டிருக்கிறார் அதற்கு பாட்டி நீ என்னதான் செய்தாலும் உன் மேல எனக்கு கோவம் இருக்கும் தான் எனக் கூறுகிறார்.

இப்படியே பேசிக் கொண்டிருக்கும் பொழுது பாக்யா பழனிச்சாமி கிளாசுக்கு வராததால் அவர் வீட்டிற்கு போனதை கூறிக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவர் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை எனவும் அவருக்கு மனக்கவலை இருப்பதாகவும் அதனால் சீக்கிரம் கல்யாணம் செய்து வைத்தால் அவர் நிம்மதியாக இருப்பார் என ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரிடம் கூறிக் கொண்டிருக்கிறார் அதனால் ஒரு பொண்ணை பாருங்கள் எனவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

உடனே ஈஸ்வரி சொந்தக்காரப் பெண்ணை  கேட்கலாம் என கூறிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் கோபி பாக்கியா செய்ததை நினைத்துக் கொண்டு மிகவும் டென்ஷனாக இருக்கிறார் ராதிகா வந்ததும் இன்னைக்கும் கடையில் வாங்கிக் கொள்ளலாம் உங்க அம்மா சமைக்கவே விடலை என கூறிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் என்னதான் எல்லாரும் குறை சொல்லுவாங்க கேட்க யாரு இருக்கா எனக் கூறும் பொழுது உடனே கோபி உணர்ச்சிவசப்பட்டு நான் கேட்கிறேன் வா ஒருகை  பார்த்திடலாம் எனக் கூட்டிக்கொண்டு போகிறார்.

கீழே இறங்கி வந்த கோபி ஈஸ்வரியை பார்த்து அம்மா ராதிகாவை திட்டினீங்களா எதுக்கெடுத்தாலும் வீட்டை விட்டு போ என எதுக்கு சொல்றீங்க என கேட்க அதற்கு ஈஸ்வரி உரிமை இல்லாத இடத்தில் இருந்தா அப்படி தான் சொல்லுவேன் அதான் பிடிக்கலைன்னா வீட்டை விட்டு போனு சொல்லிட்ட இல்ல அதெல்லாம் சொல்லலையா அவ என நக்கலாக பேசுகிறார்.

எனக்கு உரிமை இல்லைன்னா பாக்கியாவுக்கு மட்டும் உரிமையா? என கேட்க அதற்கு பாக்கியா உங்க சண்டையில ஏன் என்னை இழுக்குறிங்க என பாக்கியா கூறுகிறார். பாக்யா மட்டும் நீங்க எதுவுமே சொல்ல மாட்றீங்க இல்ல என ராதிகா கேட்க, நீயும் பாக்கியாவும் ஒண்ணா என ஈஸ்வரி கூறுகிறார். உடனே கோபி எப்ப பாரு பாக்கியா பாக்கியா தலையில் தூக்கி வச்சு ஆடுறீங்க அப்படி என்ன பண்ணிட்டா.

உங்களுக்கு வேணா இவபண்றது தெரியாம இருக்கலாம் எனக்கு நல்லாவே தெரியும் எப்ப பாரு அந்த ஆளு கூட சிரிச்சு பேசிட்டு இருக்கா இவ கிளாஸ் போறன்னு கிளாஸ் போறன்னு அவன் கூட தான் பேசுறதுக்கு போறா அவன் வீட்ல பாக்கிவுக்கு என்ன வேலை அவன் கூட சிரிச்சு சிரிச்சு அவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கா. பார்லருக்கு போய் ஹேர் ஸ்டைல் பார்த்துகிட்டு டிரஸ் ஸ்டைலா மாத்திக்கிட்டு அவன பாக்க தானே போற.

உடனே எழில் பாட்டி வாய மூடிட்டு இருக்க சொல்லுங்க வயசுல பெரியவர் கூட பார்க்க மாட்டேன் என கோபப்படுகிறார். உடனே பாக்கியா நான்  என்னமோ பண்றேன் எனக்கு சம்மதமே இல்லாமல் நீங்க ஏன் அதெல்லாம் கேட்கணும். எனக் கேட்க இது என்னோட வீடு என் பசங்க இங்க இருக்காங்க என்னோட மருமகள் இங்க இருக்காங்க இங்க ஒழுங்கா இருக்கணும் இப்படி நடந்தா கேக்க தான் செய்வேன்.

உடனே எழில் ஒழுங்கா இருந்துக்கோங்க அவ்வளவுதான் எனக் கூற நீ என்னடா என்ன சொல்ற உங்க அம்மா ஒழுங்கா நடந்துகிறாளா அந்த ஆள் கூட பேசுறா அவ்வளவு ஒழுங்காக இவ இருக்காள என கேட்க அவ்வளவுதான் நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது என எழில எகிரி குதிக்கிறார் உடனே கோபி உண்மைய சொன்னா கோவம் வருதா என்ன பாக்கியாவை பார்த்து கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் அழகழகா டிரஸ் பண்றதும் பார்லர் போய் முடி வெட்டுவதும் அந்த ஆள பார்க்க தானே எனக் கேட்க  உடனே எழில் கோபியின் சட்டையை பிடித்து விடுகிறார்.

அந்த சமயம் பார்த்து செழியன் எழிலை தள்ளிவிட்டு கோபியின் சட்டையை பிடித்து அறையப் போகிறார். இதனால் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது இன்னொரு வார்த்தை எங்க அம்மாவ பத்தி பேசினா அவ்வளவுதான் தொலைச்சிடுவேன் என செழியன் கூறுகிறார். அடுத்த காட்சியில் பாக்கியா நான் யாருக்கும் துரோகத்தை செய்யல அதனால தான் துரோகியை கூட பக்கத்திலேயே வச்சிருந்தேன்.

நீங்க எப்ப பாத்தாலும் தப்பு பண்றீங்க அதனால தான் மத்தவங்களும் உங்களுக்கு தப்பு பண்ற மாதிரியே தெரியுது. நீங்க என்ன பத்தி கேக்குறதுக்கு எந்த ரைட்சும் கிடையாது அதான்  டிவோர்ஸ் வாங்கிட்டோம் இன்னொரு டைம் என்ன பத்தி தப்பா பேசி என் பசங்க கை ஓங்குறதுக்கு முன்னாடி நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன் என கை நீட்டி பேசுகிறார்.

பிறகு அனைவரும் கோபியை திட்டுகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment