விட்ட குறை தொட்ட குறை என விடாமல் பாக்யாவை துரத்தும் கோபி.! நேருக்கு நேராக சந்தித்துக் கொண்ட பழனிச்சாமி.! பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் பழனிச்சாமி பொண்ணு பார்ப்பதற்காக பாக்கியா வீட்டிற்கு வந்துள்ளார் பழனிச்சாமியின் அம்மா பொண்ணு பார்ப்பதற்கு மிகவும் லட்சணமாக இருப்பதாக கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் இந்த வரன் அமைந்து விட்டால் அடுத்த மாதமே கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என பழனிச்சாமியின் அம்மா கூற உடனே மற்றவர்கள் அவ்வளவு அவசரமா என கிண்டல் அடிக்கிறார்கள்.

இப்படி குடும்பமே பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பழனிச்சாமி பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்கிறார் ஆனால் அந்தப் பெண் உங்களுக்கு எவ்வளவு வருமானம், உங்க வீட்டில் நிறைய தங்கச்சி இருக்கிறார்களாமே, அவர்களெல்லாம் வீட்டிற்கு வருவார்களா, உங்கள் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என்று சொன்னீர்களே அவங்களையும் நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டுமா எனக் கேட்டவுடன் பழனிச்சாமியின் முகம் மாறுகிறது.

அடுத்த காட்சியில் ராதிகா மயூ கோபி என மூன்று பெரும் காரில் வந்து கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது மிகவும் ஜாலியாக இருந்ததாக ராதிகா கூற மயூவும் செம ஜாலியாக இருந்ததாக கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் எனக்கு இரண்டு பிரண்ட்ஸ் கிடைத்துவிட்டார்கள் எனவும் கூறிக் கொண்டிருக்கிறார். நாம மூணு பேரும் இப்படி வெளியே போய் எவ்வளவு நாள் ஆயிடுச்சு செம ஜாலியாக இருக்கிறது எனவும் கூற உடனே கோபி இனிமே எல்லாம் காதுகுத்து மூக்கு குத்து எல்லாத்துக்கும் போகலாம் என நக்கலாக பேசுகிறார்.

இதனை கவனித்த ராதிகா என்ன நீங்க நக்கலா பேசுற மாதிரி தெரியுது என கேட்க இல்ல இல்ல நிஜமாக தான் சொல்லிட்டு இருக்கேன் என்பது போல் சமாளிக்கிறார். பிறகு ராதிகா எங்க அம்மா இருக்கும் வீட்டில் விடுங்கள் நாங்கள் பார்த்துவிட்டு வருகிறோம் மயூவை பாக்கணும்னு அம்மா சொன்னாங்க எனக் கூற கோபி உங்க அம்மாவை விசாரிச்சதா சொல்லு என கூறுகிறார் உடனே ராதிகா அத நீங்களே வந்து விசாரிச்சிட்டு போகலாமே எனக் கூற உடனே கோபி இல்ல இல்ல எனக்கு டயர்டா இருக்கு நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்.

அம்மா பொண்ணுக்குள் ஆயிரம் பேசுவிங்க நான் எதுக்கு குறுக்க நந்தி மாதிரி என கூறி விடுகிறார். நீங்க சொல்றத பார்த்தா நாங்க திரும்ப வராம அங்கேயே இருந்தா நல்லதுன்னு நினைக்கிறீங்களா என ராதிகா வம்பு இழுக்கிறார் அப்படி சொல்லல எல்லாரும் அங்க இருக்கலாம் மயூவையும்  உன்னையும் விட்டுட்டு நான் எப்படி தனியா இருக்க முடியுமா என்பது போல் கோபி சமாளித்து விடுகிறார்.

அடுத்த காட்சியில் பழனிச்சாமி பாக்கியா ஈஸ்வரி ராமமூர்த்தி பழனிச்சாமியின் அம்மா என அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது உங்களுக்கு பொண்ண பிடிச்சிருக்கா? உடனே பேசி முடித்து விடலாமா என பழனிச்சாமிடம் கேட்கிறார்கள் உடனே பழனிச்சாமி முதல்ல அந்த பொண்ணுக்கு என்ன புடிச்சிருக்கா என்று கேளுங்கள் அப்புறம் பேசிக் கொள்ளலாம் என தட்டிக் கழிக்கிறார்.

அதற்கு ஈஸ்வரி அதெல்லாம் நம்ம பேசி சமாளிக்கலாம் பேசிடலாம் என்பது போல் கூற உடனே பழனிச்சாமி இது சரிப்பட்டு வராது வேற ஏதாவது பொண்ணு இருந்தா பாக்கலாம் என்பது போல் கூறி விடுகிறார். ஏனென்றால் அந்தப் பெண் பேசியது அப்படி எனக் கூற வருகிறார். பழநிசாமியால் அதனை பேசாமல் அமைதியாகி விடுகிறார். அதற்கு மற்றவர்கள் ஏன் என்னாச்சு என துருவித் துருவி கேள்வி கேட்க ஒருவர்களுடன் பழகினால் தெரியும் ஒருவர் பேசினாலே தெரியும் என பழனிச்சாமி கூறுகிறார்.

பிறகு ஈஸ்வரி இன்னும் சொந்தக்காரப் பெண் நிறையாக இருக்கிறது அவர்களிடம் பார்ப்போம் எனக் கூறி விடுகிறார் உடனே பழனிச்சாமி நான் கிளம்புறேன் என கிளம்புகிறார்கள் அந்த சமயத்தில் கோபி வருகிறார் கோபியிடம் பழனிச்சாமி பேசிக் கொண்டிருக்கிறார் என்னை ஞாபகம் இருக்கிறதா என இங்கிலீஷில் தப்பு தப்பாக பேச உடனே பாக்யாவிடம் கேட்டு சரியாக கேட்கிறார்.

இதற்கு முன்பு பழனிச்சாமி மற்றும் பாக்யா இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கோபி கேட்டு விட்டு செவுத்தில் முட்டிக் கொள்கிறார் நமக்கு ஒரு துணை வேண்டாமா என பாக்கியா கேட்க அதற்கு கோபி அதிர்ச்சடைந்து நெஞ்சை பிடித்துக் கொள்கிறார். பழனிச்சாமியும் கோபியும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment