செழியன் எழிலை தொடர்ந்து கோபி தலையில் விழுந்த இடி.. எரியிற அடுப்பில் சூடு வைத்த ராதிகா.. ஈஸ்வரிக்கு தெரிந்தால் என்ன ஆகும்.?

baakiyalakshmi : பாக்கியலட்சுமி சீரியலில் ஏற்கனவே கோபி நடத்தி வந்த கம்பெனி மிகவும் நஷ்டம் அடைகிறது அது மட்டும் இல்லாமல் இருக்கிற கிளையண்ட் அனைவரும் அவரை விட்டுப் போனதால் கம்பெனியை இழுத்து மூடும் நிலைமைக்கு வந்து விடுகிறார் கோபி அதே நேரத்தில் கம்பெனியில் இருக்கும் ஊழியர்களும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கம்பெனிக்கு போன கோபி தன்னுடைய நிலைமையை எடுத்து சொல்லி இனிமேல் கம்பெனி நடத்த முடியாது அதனால் நிரந்தரமாக மூட போகிறேன் என ஊழியர்களிடம் கூற ஊழியர்கள் அனைவரும் நாங்கள் என்ன செய்ய முடியும் என புலம்புகிறார்கள் அது மட்டும் இல்லாமல் இரண்டு மாத சம்பளம் அப்படியே நிற்கிறது என கூறுகிறார்கள்.

ரோகினி உன் மேட்டர் தெரிஞ்சா உன் நிலைமை என்ன தெரியுமா.? இந்த சின்ன பொய்க்கே இந்த ஆட்டம் ஆடுற…

அதற்கு கோபி எனக்கு ஒரு மாதம் டைம் கொடுங்க உங்களோட சம்பளத்தை செட்டில்மெண்ட் செய்து விடுகிறேன் என டைம் கேட்கிறார். அடுத்த காட்சியில் தன்னுடைய நண்பனை வரச் சொல்லி அவரிடம் புலம்புகிறார் ஏற்கனவே வீட்டில் செழியன் விவாகரத்து பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது மற்றொரு பக்கம் அமிர்த வாழ்க்கையில் புயலாக வீசிக்கொண்டிருக்கிறார் கணேஷ்.

போலீஸ் அவர்களுடன் வந்து அமிர்தா என்னோடு தான் வாழ வேண்டும் என கூற வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் கோபி குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார்.

100 வது நாளில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த வினுஷா.. கேமரா முன் நிக்சனை பற்றி என்ன சொல்ல போகிறார் தெரியுமா.?

அப்பொழுது டீ போடுவதற்காக ஏரியாத அடுப்பில் பாத்திரத்தை வைத்து இன்னும் சூடாகவில்லையே என பேசிக்கொண்டு இருக்கிறார் ஏன் சூடாகவில்லை என கைய வைத்து பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ராதிகா வருகிறார். அப்பொழுது பாக்கியா அங்கு நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அங்க கைய வச்சா சூடு ஆகாது இங்க கையை வை என எரிகின்ற நெருப்பில் கையை வைத்து விடுகிறார் உடனே கோபியை அழைத்து வந்து ரூமில் படுக்க வைத்து எதுக்காக திரும்ப திரும்ப குடிச்சிட்டு வரீங்க என கேட்கிறார் அதற்கு கோபி என்னோட நிலைமையை சொன்னா உனக்கு புரியாது என எதையும் சொல்லாமல் மூடி மறைத்து விடுகிறார்.

ரத்தம் தெறிக்க தெறிக்க படம் எடுக்கும் 3 இயக்குனர்கள்.! உச்சகட்ட கொடூரத்தில் தனுஷ் படம்..

கொஞ்சமா சரக்கடிச்சதுக்கு இப்படி கத்தராலே கம்பெனி இழுத்து மூடிட்டேன்னு தெரிஞ்சா என்ன நடக்கும் என கோபி மைண்ட் வாய்ஸ் பேசிக் கொண்டிருக்கிறார். உடனே கோபியை பிடித்து தள்ளி விட்டு வெளியே செல்கிறார் இனிமேல் செழியன் எழிலை தொடர்ந்து கோபிக்கும் பிரச்சினை வருகிறது என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Exit mobile version