கேண்டீன் டெண்டர் எடுக்க புதிய கம்பெனிக்கு போன பாக்கியா.. அங்கேயும் சகுனி வேலை பார்த்த கோபி – பரபரப்பான கட்டத்தில் பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு

Baakiyalakshmi serial October 6 : இன்றைய எபிசோடில் செழியன் ஆபீஸ்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு என்று பாக்கியாவிடம் சொல்லிவிட்டு மாலினியை பார்க்க சென்று இருந்தார். அங்கு இரவு முழுவதும் தங்கி விட்டு காலையில் தான் ஹாஸ்பிடலுக்கு வருகிறார்.

பாக்கியா நீ வேலைக்கு தான் போயிட்டு வரியா, குழந்தை கூட  இருக்க முடியல அப்படிப்பட்ட வேலையே உனக்கு தேவை இல்லை, ஒழுங்கா ஜெனி, குழந்தை கூட இரு இல்லன்னா அந்த வேலையே தேவையில்லை என்று சொல்கிறார். பிறகு பாக்கியா ஈஸ்வரி இடம் ஜெனிய டிஸ்டார்ஜ் பண்ணது நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாமா என்று கேட்க ஈஸ்வரி அதெல்லாம் அவங்க அம்மா பார்த்துப்பாங்க..

உனக்கு இது தேவையில்லாத வேலை என்று சொல்கிறார். ராமமூர்த்தி பாக்யாவிடம் நீ ஜெனியை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்னு சொல்றியே அதுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கு என்னமா என்று கேட்க செழியன் கொஞ்ச நாளா சரி இல்ல அவன் வீட்டுக்கு ஒழுங்கா வரதில்லை, எங்கேயோ போறான் ஜெனியும் குழந்தையும் வீட்ல இருந்தா நேரத்துக்கு அவனுக்கு வரணும்னு தோணும் மாமா..

அதனால தான் என்று சொல்கிறார் உடனே  ராமமூர்த்தி நானும் செழியன கவனித்தேன் நான் ஈஸ்வரி கிட்ட பேசுறேன் என்று சொல்கிறார்.. அடுத்து எழில் அமிர்தாவிடம் நிலாவுக்கு குட்டி பாப்பா என்றால் ரொம்ப பிடிக்கும் போல உனக்கும் குழந்தைங்க பிடிக்கும் அதனால நம்மளும் இன்னொரு குழந்தை பெத்துக்கலாமா என்று கேட்கிறார்.

]அதற்கு அமிர்தாவும் சிரித்துக் கொண்டே சம்மதம் சொல்கிறார். பிறகு பாக்கியா பழனிச்சாமி சொன்னாரு ஒரு ஆபீஸ்ல கேண்டீன் வேலை இருக்குன்னு அங்க போய் பாத்துட்டு வரேன் என்று செல்வியை கூட்டிகிட்டு பாக்கியா அந்த ஆபீஸ்க்கு போகிறார். அந்த ஆபீஸ் மேனேஜரின் மருமகன் வினோத்தை பார்க்க கோபியும் அங்கு வருகிறார்.

கோபி பாக்யாவை பார்த்துவிட்டு வினோத்திடம் ஏன் பாக்கியலட்சுமி இங்க வந்து இருக்காங்க என்று கேட்க கேண்டீன் டென்டர்க்கு என்று சொல்வதும் அந்த வேலை பாக்யாவுக்கு கிடைக்கக் கூடாது இதுக்கு முன்னாடி பாக்கியா ராதிகா ஆபீஸ்ல தான் கேன்டீன் டெண்டர் எடுத்து நடத்திக்கிட்டு இருந்தா அவ செஞ்ச வேலை சரியில்லைன்னு தான் இப்ப வேலையை விட்டு தூக்கிட்டாங்க..

அதனால இந்த கேண்டின அவ ஒழுங்கா நடத்த மாட்டா என்று சொல்ல உடனே வினோத் மாமனாரிடம் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் வெளிய வாங்க என்று கூப்பிட்டு பாக்கியலட்சுமிக்கு இந்த கேன்டின் ஆர்டர் தர வேணாம் மாமா என்று சொல்வதும் பிறகு அவர் பாக்யாவிடம் நான் அப்புறம் சொல்றேன்.

நீங்க கிளம்புங்க என்று சொல்லிவிட்டார்.. கோபி பாக்யாவை பார்த்து என்னோட பிரண்டு ஆபீஸ்க்கு நீ வேலைக்கு வரலாம்னு பாத்தியா நீ இந்த சென்னையில எங்க போனாலும் உனக்கு வேலை கிடைக்காத மாதிரி நான் பண்ணுவேன் என்று திமிராக பேசுகிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.