பாக்கியலட்சுமி சீரியலில் இனி இவருக்கு பதில் இவர்தான்.! இனிமே நீங்க இருந்தா என்ன போனா என்ன சலிப்புடன் ரசிகர்கள்.!

Baakiyalakshmi : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது ஆனால் சமீப காலமாக மிகவும் டல் அடிக்க ஆரம்பித்து விட்டது அதற்கு காரணம் சீரியலில் சுவாரசியம் குறைந்து கொண்டே போகிறது. வழக்கம் போல் அரைத்த மாவை அரைப்பது போல் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சீரியலில் சமீபத்திய எபிசோடில் கேண்டின் காண்ட்ராக்டில் செல்வி சிறிய தவறு செய்ததால் கேண்டின் கை மீறி போகும் நிலைமை வந்து விடுகிறது இதனால் பாக்கியா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார் அதுமட்டுமில்லாமல் அழுது புலம்புகிறார் இந்த சமயத்தில் கம்பெனி முதலாளியிடம் ஒரு முறை பேசிப் பார்க்கலாம் என பழனிச்சாமி ஐடியா கொடுக்க பாக்யாவும் பேசுகிறார்.

அந்த கம்பெனி முதலாளி இதுதான் கடைசி வார்னிங் இதற்கு மேல் தவறு செய்தால் என்னால் எதுவும் செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறி விடுகிறார். பாக்கியாவும் கேண்டினை தக்க வைத்துக் கொள்கிறார் இப்படியே சென்று கொண்டிருக்க இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரித்திகா தற்பொழுது இந்த சீரியலில் இருந்து வெளியேறுகிறார்.

இனி ரித்திகா நடித்து வந்த அமிர்தா கதாபாத்திரத்தில் இனிமேல் நடிக்க போவது சின்னத்திரையில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வரும் அக்ஷிதா அசோக் தான் அமிர்தா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இவர் நடித்து வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலிலும் நடிக்க இருப்பதால் இவருக்கு பல சீரியல் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது ஆனால் இவரின் கதாபாத்திரம் இந்த சீரியலில் பெரிதாக இருக்காது என்பதால் இதுல நீங்க நடிச்சா என்ன நடிக்காட்டி இருந்தா என்ன என ரசிகர்கள் சளிர்ப்புடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version