கணேசனின் சூழ்ச்சி வலையில் சிக்கிய பாக்யா.. கழுத்தில் கத்தியை வைத்து அமிர்தா நிலாவை கடத்திச் சென்ற கணேஷ்… பரபரப்பின் உச்சத்தில் பாக்கியலட்சுமி..

Baakiyalakhmi Serial today promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் கணேஷ் எப்படியாவது அமிர்தாவையும் தனது மகளையும் பிரித்து தன்னுடன் வாழ வைக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார். அப்படி தற்பொழுது கணேஷின் அம்மா பாக்கியலட்சுமிக்கு போன் செய்து அப்பா மிகவும் சீரியஸான நிலைமையில் இருப்பதாகவும் அமிர்தாவை பார்க்க வேண்டும் என கூறுவதாகவும் சொல்கிறார்.

இதனால் பாவம் பட்டு பாக்யாவும் தனது வீட்டில் இருப்பவர்களிடம் இது பற்றி கூற கோபி ஏற்கனவே பல பிரச்சினைகள் உள்ளது இது தேவை இல்லை எனக் கூறிவிடுகிறார். எனவே ஈஸ்வரியும் இதை அமிர்தா, எழில் இருவரிடமும் கூறக்கூடாது என சொல்ல இருந்தாலும் பாக்யா இவர்களிடம் தனியாக சொல்கிறார்.

சைடு போஸில் சகலத்தையும் காட்டிய கீர்த்தி சுரேஷ்.! முந்தானை இவ்வளவு குட்டையாவா இருக்கும்..

எழில் போகலாம் என கூறினாலும் அமிர்தா என்னால நிறைய பிரச்சனை வந்துடுச்சு இனிமே எந்த பிரச்சனையும் வேணாம் அங்கயெல்லாம் போக வேண்டாம் என சொல்கிறார். இதனை அடுத்து மீண்டும் கணேஷின் அம்மா பாக்யாவிற்கு போன் செய்து அவருக்கு சீரியஸா இருக்கு ஒருமுறை அமிர்தாவ அழைச்சிட்டு வாங்க என சொல்ல இதையும் பாக்யா எழில் அமிர்தாவிடம் சொல்கிறார்.

இதனை ஏற்றுக் கொள்ளாத அமிர்தா அங்கு போகவே வேண்டாம் என சொல்லி விடுகிறார். அதன் பிறகு கணேஷ் தான் தனது அம்மா அப்பாவை வேண்டுமென்று இப்படி பேசி அமிர்தாவை வரவைக்க பிளான் போட்டு உள்ளார் என தெரிய வருகிறது. இந்த சூழலில் தற்பொழுது வெளியாக இருக்கும் இன்றைய ப்ரோமோவில் பாக்கியா அமிர்தா மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு அவர்களுடைய வீட்டிற்கு செல்ல அமிர்தா என்னப்பா ஆச்சு என கேட்க உடனே ரூமில் இருந்து கணேஷ் வருகிறார்.

மாமா மேல அம்புட்டு லவ்.. கொட்டி தீர்த்த ரோபோ சங்கர் மகள் இந்திராஜா.. வைரலகும் வீடியோ

கணேஷ் எனது மனைவியையும் குழந்தையையும் இங்கேயே விட்டு செல்லுங்கள் என சொல்ல, முடியாது என பாக்யா வெளியில் போக முயற்சிக்கிறார் ஆனால் உடனே கணேஷ் அமிர்தாவை இழுத்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொண்டு நிலாவையும் அமிர்தாவையும் ஒரு காரில் கடத்தி சென்று விடுகிறார் இதனால் பாக்யா அதிர்ச்சியில் உள்ளார்.