2 முறை விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது 3வது காதலருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.!

சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் பிரபலமான சீரியல் நடிகை ஒருவர் தன்னுடைய பெற்றோர்கள சம்மதத்துடன் மிகவும் கோலாகலமாக ஒரு நபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணத்தினால் சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு அமெரிக்கா சென்று அங்கு வேறு ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அந்த நடிகை அந்த திருமண வாழ்க்கையும் நிலைக்காமல் அவரையும் விவாகரத்து செய்துவிட்டு தற்பொழுது தன்னுடைய குழந்தைகளுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் இது இவருடைய மூன்றாவது கணவரா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

விமான பணி பெண்ணாக பணிபுரிந்து அதன் பிறகு சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வம் இருந்ததால் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சன் சிங்கர், கடிதம், என் இனிய தோழியே உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி. இதனை அடுத்து விஷ்ணு நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் சூரியின் மனைவியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.

இதனை அடுத்து வாணி ராணி, மரகத வீணை, காயத்ரி போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்பொழுது டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து அசத்தி வருகிறார்.

reshma pasubuleti
reshma pasubuleti

இவ்வாறு திரைப்படம் சீரியலிலும் இரண்டிலும் பிஸியாக இருந்து வரும் இவர் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் விஜய் டிவியை அடுத்து சன் டிவி, ஜீ தமிழ் போன்ற சீரியல்களிலும் நடித்து வரும் இவர் தற்பொழுது தன்னுடைய ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதனைப் பார்த்து ரசிகர்கள் இவர்தான் ரேஷ்மாவின் மூன்றாவது காதலரா என கூறி வருகின்றனர்.

Leave a Comment