அர்ச்சனாவை பிராங் செய்து அலறவிட்ட பா ரஞ்சித்..! அடேங்கப்பா இப்படி ஒரு அல்வாவா..?

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் பா ரஞ்சித் அந்த வகையில் நமது இயக்குனர் பல இயக்குனர்களும் பேச தயங்கிய மற்றும் வெளிப்படையாக காட்ட நினைத்த பல்வேறு விஷயங்களை வெள்ளி திரையில் வெளிச்சம் போட்டு காட்டியவர் என்று சொல்லலாம்.

இவ்வாறு பிரபலமான நமது பா ரஞ்சித் அவர்கள் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அது மட்டும் இல்லாமல் அப்போது இருந்து இவர் பயங்கர ஆர்வமாக இருப்பார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் இளமை புதுமை என்ற ஷோ மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஆண்கள் அர்ச்சனாவை நமது இயக்குனர் பிராங்க் பண்ணிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது இவை அர்ச்சனாவின் தோழி ஒருவரின் மூலம்தான் நடந்தது சிங்கப்பூர் சேனல் ஒன்றிற்காக பட குழு இதை ஏற்பாடு பண்ணி இருந்தார்கள்.

அப்பொழுது வெங்கட் பிரபு இப்படி ஒரு பிராங்க் ஐடியா சொன்னவுடன்  இதை நான் செய்கிறேன் என பா ரஞ்சித் முன் வந்தார் அந்த வகையில் ஹோட்டல் ஒன்றில் தன்னுடைய தோழியுடன் அமர்ந்திருந்த அர்ச்சனாவிடம் தன்னை இயக்குனர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக பா. ரஞ்சித் அறிமுகப்படுத்திக் கொள்வார்.

அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு ஒரு ரோல் இருக்கு வித்தியாசமான கதை ஒன்றை அவரிடம் சொல்ல தொடங்குவார் அதைக் கேட்ட அர்ச்சனா என்ன இப்படி ஒரு கதையா என்கிற ரீதியில் அவரை தவிர்க்க ஆரம்பித்தார் ஆனால் விக்ரமாதித்தன் போல் விடாமல் பேசிய பா ரஞ்சித் படத்துல நடிக்கணும்னா உங்களுக்கு எவ்வளவு வேணும் 100 ரூபாய் போதுமா என கேட்பார்.

உடனே நீங்க சொல்ற காசு பஸ்ஸுக்கு சொல்றீங்களா என கேட்டு லோ பட்ஜெட் படமா என்று ஆச்சரியத்துடன் கேட்டிருந்தார் உடனே பா ரஞ்சித் அவர்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த சீனுக்கு மட்டும் இரண்டு கோடி ரூபாய் பட்ஜெட் போட்டு இருக்கிறோம் அதுமட்டுமில்லாமல் உங்ககிட்ட நான் கேட்டது ஹீரோயின் ரோளுக்கு கிடையாது ஜூனியர் ஆர்டிஸ்ட் ரோலுக்காக என கலாய்த்து இருப்பர். உடனே வெங்கட் பிரபு அவர்கள் பா ரஞ்சித்தின் முதுகில் செல்லமாக தட்டுவார்.

Leave a Comment