அவதார் இரண்டாவது பாகத்தை பார்த்துவிட்டு முதல் ஆளாக தனது விமர்சனத்தை கூறிய சிம்பு.! படம் எப்படி இருக்கு தெரியுமா.?

தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை தமிழை தாண்டி ஹாலிவுட் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்து வருகிறார்கள் அந்த வகையில் ஹாலிவுட் திரைப்படத்தை ரசிகர்கள் விமர்சனமும் செய்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெறுவது மட்டுமல்லாமல் மிகப்பெரிய வசூலையும் பெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜேம்ஸ் கேமூரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் அவதார் இந்த திரைப்படம் ஹாலிவுட்டில் 3டி  யில் வெளியாகியது இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களையும் பெற்றது அதுமட்டுமல்லாமல் வசூலில் மிகப்பெரிய வசூலை பெற்றது. உலக அளவில் மாபெரும் வசூலை பெற்ற இந்த திரைப்படத்தை இரண்டாவது பாகத்தை இயக்க முடிவு செய்தார்கள்.

இந்தத் திரைப்படத்திற்கு அவதார் தி வே ஆஃப் வாட்டர்  என தலைப்பை வைத்துள்ளார்கள். நாளை மிகவும் பிரமாண்டமாக வெளியாகும் இந்த திரைப்படத்தின் பிரீமியர் காட்சிகள் பல நாடுகளில்  நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை பார்த்த பல சினிமா பிரபலங்களும் தங்களுடைய கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

பிரிமியர் காட்சியை பார்த்த சினிமா பிரபலங்கள் தங்களது கருத்தை கூறி வருவதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை சிம்பு தாய்லாந்தில் பார்த்துள்ளார் அந்த படத்தை பார்த்துவிட்டு கிளாப் எமோஜி பதிவிட்டு படம் அருமையாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ள தகவல் தற்பொழுது  சமூக வலைதளத்தில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.

avathar
avathar

Leave a Comment