ரசிகர்களை திரும்பி பார்கவைத்த அஜித் அதிர்ந்த பிரபலங்கள்.! வைரலாகும் வீடியோ!!

தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தல போல நிற்பவர் தல அஜித். தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். தற்பொழுது அவர் வலிமை படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் இதற்கு முன்பு நேர்கொண்டபார்வை படத்தை தயாரித்துள்ளார் தற்போதைய படத்தையும் அவர் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரிஸ்கான காட்சியினை அஜித் அவர்கள் டூப் போடாமல் அவராக முன்வந்து அக்காட்சியை நடித்தார் அப்பொழுது அஜித் அவர்கள் விபத்துக்குள்ளாகினார். பதற்றமடைந்த அப்படக்குழுவினர் வந்து பார்த்த பொழுது அஜித் அவர்களுக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்தது. இருப்பினும் இதனை அறிந்த அவரது ரசிகர்கள் பதற்றம் அடைந்தனர் இருபின்னும் அவரது ரசிகர்கள் காயங்கள் குணமாக வேண்டும் என இறைவனிடம் பிராத்தனை பண்ணி வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித் அவர்கள் தன்னுடைய உதவி ஆய்வாளரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்கள் இணையதளத்தில் வெளியீட்டு வைரலாகி வருகின்றனர்.

அவருடைய குடும்ப திருமணத்தைப் போன்று விருந்தினரை வாசலில் நின்று வரவேற்றார் இதனை பார்த்த பார்வையாளர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ரசிகர்கள் இணையதளத்தில் அஜித்தை புகழ்ந்து வருகின்றனர் மற்றும் சிலர் அஜித் ரசிகனாக இருக்க தனக்கு பெருமையாக உள்ளது எனவும் இணையதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/unique_sendhil/status/1231069300632489984

தளபதியை சந்தித்த ரசிகர்கள் திக்குமுக்காடிய விஜய் .! வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகிவருகிறது!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். அவர் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கிவருகிறார். மற்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள சுரங்கங்களில் காட்சிகளாக எடுக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் தளபதி அவர்கள் பல பிரச்சினைகளை சந்தித்திருந்தாலும் அவரது ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க நெய்வேலியில் சூட்டிங் முடிந்ததும் வேன் மீது ஏறி ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார் விஜய். அவரது ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்தது.

இந்த நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பு தற்போது சென்னையில் எடுக்கப்பட்டு வருகிறது இதனை அறிந்த அவரது ரசிகர்கள் அங்கு சென்றுள்ளனர் இதனை உணர்ந்த விஜய் அவர்கள் ரசிகர்களுடன் செல்பி எடுக்கும் வீடியோ காட்சி படத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இறந்தவர்களை நேரில் கண்டு மனம் உருகிய படக்குழுவினர்.! வைரலாகும் வீடியோ!!

உலகநாயகன் கமலஹாசன் தற்பொழுது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்தியன் 2 திரைப்படத்தில் படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் பணி நடைபெற்றது அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் துடிதுடித்து இறந்தனர் இந்த சம்பவம் சினிமா துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியன்-2 படப்பிடிப்புக்காக சென்னை அருகில் உள்ள பூந்தமல்லி நசரத்பேட்டை உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்றது அப்போது ராட்சத விளக்குகள் கிரேன் மூலம் பொருத்தப்பட்டது.

அப்பொழுது வெயிட் தாங்காமல் கிரேன் கம்பி அறுந்து விழுந்தது இந்த விபத்தில் உதவி இயக்குனர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா உதவி நடன இயக்குனர் சந்திரன் ஆகியோர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் பத்துக்கும் மேற்பட்ட திரைப்பட கலைஞர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி அளித்து வருகிறார்கள்.இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தை பற்றி விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மருதுவமனையில் அவர்களது உடல் பரிசோதனை செய்யப்பட்டு வெளி வரும் காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த படக்குழுவினர் மிகவும் மன வருத்தத்தில் உள்ளனர்.

போக்கிரி படத்தை கிண்டல் செய்ததால் விஜயும் அவரது அப்பாவும் என்னை தேடினாங்க. லொள்ளு சபா இயக்குனர் பேட்டி.! வீடியோ இதோ!!

விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பல படங்களை பாரபட்சம் பார்க்காமல்  கிண்டலும் கேலியுமாக கலாய்த்த நிகழ்ச்சி லொள்ளுசபா. சூப்பர் ஸ்டார் இலிருந்து புதுமுக நடிகர்கள் உள்ள படங்கள் வரை கலாய்த்து நம்மை சிரிப்புக்கு உள்ளாக்கும் நிகழ்ச்சி லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சியில் இருந்து பல்வேறு நடிகர்கள் தற்போது தமிழ் திரையில் காமெடியன்களாக கலக்கி வருகிறார்கள்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சந்தானம், சுவாமிநாதன், பாஸ்கர் போன்ற பல்வேறு நடிகர்கள் லொள்ளு சபாவில் இருந்து வந்தவர்கள்தான்.
தற்பொழுது  லோல்லு சபா நிகழ்ச்சி நடைபெறவில்லை என்றாலும் தற்பொழுது யூட்யூபில் வைரலாகி வருகிறது.

லொள்ளு சபா இயக்குனர் ராம்பாலா, மற்றும் சுவாமிநாதன் போன்ற அவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் லொள்ளுசபா இயக்குனர் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார். என்னவென்றால் விஜய்யின் போக்கிரி படத்தை  கலாய்த்ததால் விஜய்யும் அவரது தந்தையும் தங்களை தேடியதாக லொள்ளு சபா இயக்குனர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியது சூட்டிங் எடுத்து முடித்து நாங்கள் உட்கார்ந்திருந்தோம். அப்போது எனக்கு ஆபீஸில் இருந்து போன் வந்தது. ஏன் ஆபீஸ்க்கு வரவில்லை இங்கு பிரச்சனை நடந்துகொண்டிருக்கிறது என்று சொன்னார்கள்.

நான் என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு உங்கள் இருவரையும் விஜய்யும், விஜய் தந்தையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார்கள். அதை இப்பொழுது ஊடகங்கள் முன்பு  பகிர்ந்துகொண்டார். அவர்கள் தற்போது மறந்து இருப்பார்கள் எனவும் கூறினார்.

Exit mobile version