இறந்தவர்களை நேரில் கண்டு மனம் உருகிய படக்குழுவினர்.! வைரலாகும் வீடியோ!!

உலகநாயகன் கமலஹாசன் தற்பொழுது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்தியன் 2 திரைப்படத்தில் படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் பணி நடைபெற்றது அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் துடிதுடித்து இறந்தனர் இந்த சம்பவம் சினிமா துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியன்-2 படப்பிடிப்புக்காக சென்னை அருகில் உள்ள பூந்தமல்லி நசரத்பேட்டை உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்றது அப்போது ராட்சத விளக்குகள் கிரேன் மூலம் பொருத்தப்பட்டது.

அப்பொழுது வெயிட் தாங்காமல் கிரேன் கம்பி அறுந்து விழுந்தது இந்த விபத்தில் உதவி இயக்குனர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா உதவி நடன இயக்குனர் சந்திரன் ஆகியோர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் பத்துக்கும் மேற்பட்ட திரைப்பட கலைஞர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி அளித்து வருகிறார்கள்.இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தை பற்றி விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மருதுவமனையில் அவர்களது உடல் பரிசோதனை செய்யப்பட்டு வெளி வரும் காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த படக்குழுவினர் மிகவும் மன வருத்தத்தில் உள்ளனர்.

போக்கிரி படத்தை கிண்டல் செய்ததால் விஜயும் அவரது அப்பாவும் என்னை தேடினாங்க. லொள்ளு சபா இயக்குனர் பேட்டி.! வீடியோ இதோ!!

விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பல படங்களை பாரபட்சம் பார்க்காமல்  கிண்டலும் கேலியுமாக கலாய்த்த நிகழ்ச்சி லொள்ளுசபா. சூப்பர் ஸ்டார் இலிருந்து புதுமுக நடிகர்கள் உள்ள படங்கள் வரை கலாய்த்து நம்மை சிரிப்புக்கு உள்ளாக்கும் நிகழ்ச்சி லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சியில் இருந்து பல்வேறு நடிகர்கள் தற்போது தமிழ் திரையில் காமெடியன்களாக கலக்கி வருகிறார்கள்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சந்தானம், சுவாமிநாதன், பாஸ்கர் போன்ற பல்வேறு நடிகர்கள் லொள்ளு சபாவில் இருந்து வந்தவர்கள்தான்.
தற்பொழுது  லோல்லு சபா நிகழ்ச்சி நடைபெறவில்லை என்றாலும் தற்பொழுது யூட்யூபில் வைரலாகி வருகிறது.

லொள்ளு சபா இயக்குனர் ராம்பாலா, மற்றும் சுவாமிநாதன் போன்ற அவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் லொள்ளுசபா இயக்குனர் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார். என்னவென்றால் விஜய்யின் போக்கிரி படத்தை  கலாய்த்ததால் விஜய்யும் அவரது தந்தையும் தங்களை தேடியதாக லொள்ளு சபா இயக்குனர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியது சூட்டிங் எடுத்து முடித்து நாங்கள் உட்கார்ந்திருந்தோம். அப்போது எனக்கு ஆபீஸில் இருந்து போன் வந்தது. ஏன் ஆபீஸ்க்கு வரவில்லை இங்கு பிரச்சனை நடந்துகொண்டிருக்கிறது என்று சொன்னார்கள்.

நான் என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு உங்கள் இருவரையும் விஜய்யும், விஜய் தந்தையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார்கள். அதை இப்பொழுது ஊடகங்கள் முன்பு  பகிர்ந்துகொண்டார். அவர்கள் தற்போது மறந்து இருப்பார்கள் எனவும் கூறினார்.

ரஜினிகாந்த்தின் புதிய மோஷன் போஸ்டர் இதோ.! இணையத்தளத்தில் பட்டையகிளப்பும் வீடியோ!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். தர்பார் படத்தை தொடருந்து அவர் தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168 வது படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சாகச நாயகன் பேர் கிரில்ஸ் ரஜினி அவர்கள் கைகோர்த்து உள்ளார்.இந்த நிகழ்ச்சியில் அவருக்காக சுமார் ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியாவிலிருந்து பிரதமர் மோடி மற்றும் பல முன்னணி பிரபலங்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர் தற்போது ரஜினி அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சியை டிஸ்கவரி சேனலில் வர உள்ளது.

Exit mobile version