மும்பையில் மாநாடு படத்தை பார்த்த அட்லீ – திரையரங்கில் நடந்த சுவாரஸ்யமான தகவலை போன் பண்ணி வெங்கட்பிரபுவுக்கு சொன்ன இயக்குனர்.

நடிகர் சிம்பு சமீபகாலமாக பல்வேறு புகார்கள் அடுக்கடுக்காக இருந்த நிலையில் அதை உடைத்தெறியும் வகையில் சமீபகாலமாக சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மேலும் அவரது நடிப்பு மற்றும் உடல் எடை மாற்றம் பல்வேறு நிகழ்ந்துள்ளன.

ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு உடன் கை கோர்த்தது இவர் நடித்த திரைப்படம் மாநாடு. இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி அண்மையில் மாநாடு திரைப்படம் திரையரங்கில் வெளியானது. படத்தின் கதைக்கு ஏற்றவாறு இந்த படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன்.

மற்றும் மனோஜ், ஒய் ஜி மகேந்திரன், எஸ் ஏ சந்திரசேகர் போன்ற பலரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.  படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் தற்போது அனைத்து தரப்பட்ட மக்களையும் திரையரங்கு பக்கம் உள்ளது. படம் டைம் லூப்பை அடிப்படையாக கொண்டு வித்தியாசமாக இருந்ததால் இது தற்போது நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ரசிகர்களும் தாண்டி பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர். மாநாடு திரைப்படம் தமிழில் தாண்டியும் மற்ற மொழிகளிலும் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மும்பையில் ஓய்குனர் அட்லி ஷாருக்கானை வைத்து ஒரு படம் எடுத்து வருகிறார்.

அண்மையில் இயக்குனர் அட்லி மாநாடு படம் பார்க்கச் சென்றுள்ளார் தான் சென்ற திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்த தாகவும் படத்தை செமையாக எஞ்சாய் செய்ததாகவும் அவர் சொல்லி வெங்கட்பிரபு போன் செய்து வாழ்த்துகளை தெரிவித்ததாக சினிமா வட்டாரங்கள் பக்கத்திலிருந்து பேசப்படுகிறது.

Leave a Comment