நயன்தாரா கல்யாணத்தில் அலப்பறை செய்த அட்லீ – ரகசியத்தை புட்டு புட்டு வைக்கும் ரசிகர்கள்.!

சமீபத்தில் மக்கள் ரசிகர்கள் என பலரும் எதிர்பார்த்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இருவரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சினிமா பிரபலங்கள் என சிலர் மத்தியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது புதுமண தம்பதிகளாக ஊர் சுற்றி வருகின்ற நிலையில் இவர்களது திருமணத்திற்கு ஷாருக்கான், அட்லி, ரஜினி, கார்த்தி, சூர்யா, டிடி போன்ற பல பிரபலங்களும் கலந்து கொண்டு திருமணத்தை சிறப்பித்து வைத்தனர். இவர்களது திருமணத்திற்கு வந்த பிரபலங்கள் பலரும் விலையுயர்ந்த கார்களில் வந்து இறங்கினார்கள்.

நயன்தாராவின் திருமணத்திற்கு இயக்குனர் அட்லி ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்து இறங்கினார். அட்லி தற்போது பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாராவை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இதனால் தற்போது அட்லி அதிகம் சம்பளம் வாங்கி விலை மதிப்பு அதிகம்.

உடைய ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி இருப்பாரா என பலரும் நினைத்தனர். ஆனால் அந்த கார் பல்லாவரத்தில் உள்ள ஒரு தொழில் அதிபரின் காரை கடன் வாங்கி அதில் அட்லி நயன்தாராவின் திருமணத்திற்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றன. இதனிடையே கடன் வாங்கி சொகுசு காரில் பந்தாவாக நயன்தாராவின் கல்யாணத்திற்கு வரவேண்டுமா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் அட்லி இயக்கத்தில் உருவான ராஜா ராணி, பிகில் போன்ற இரண்டு முக்கிய திரைப்படங்களிலும் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார் அப்போதிலிருந்தே இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு ரீதியான உறவு இருந்து வந்த நிலையில் இப்படி கடன் வாங்கி காரில் பந்தாவாக சென்றுள்ளார் என கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version