தூக்கிவிட்ட நடிகரின் காலை வாரிவிட்ட அட்லி.! கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள்…

வெறும் நான்கு படங்களை இயக்கி தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் அட்லி. தமிழை தாண்டி பாலிவுட்டிலும் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படம் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி முதல் படத்திலேயே தனக்கான அங்கீகாரத்தை பிடித்தார் அதன்பிறகு இரண்டாவது படத்திலேயே நடிகர் விஜய் வைத்து இயக்கினார் அப்படி இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் முதன் முதலாக வெளியான தெறி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை ஆடியது மட்டுமல்லாமல் வெற்றியும் பெற்றது.

அதனை தொடர்ந்து மெர்சல், பிகில், என நடிகர் விஜய் வைத்து தொடர் மூன்று வெற்றியை கொடுத்தார் இயக்குனர் அட்லி. இதனால் தற்போது இயக்குனர் அட்லி அவர்கள் இதுவரைக்கும் தோல்வியை கண்டிடாத இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். பிகில் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய் அவர்கள் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. அதுமட்டுமல்லாமல் விஜய், ஷாருக்கான், அட்லீ, மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் செம்ம வைரல் ஆனது.

இந்த நிலையில் நடிகர் விஜய் அவர்கள் ஜவான் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்று தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது அது மட்டும் இல்லாமல் அவருக்கு பதிலாக வேற ஒரு முன்னணி நடிகரை அட்லி நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புஸ்பா 2 படத்தில் பிசியாக இருந்து வரும் அல்லு அர்ஜனை ஜவான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று ஷாருக்கான் மற்றும் அட்லி இருவரும் தனி விமானத்தில் சென்று அவருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் விஜய் நடிக்க வேண்டிய சிறப்பு தோற்றத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய் ரசிகர்கள் வாழ்க்கை கொடுத்தவரை காலை வாரி விடுவது நியாயமே இல்லை எதற்காக விஜயை தூக்கினீர்கள் என்று கேள்வி கேட்டு விளாசி வருகிறார்கள்.

Leave a Comment