பழைய படத்தின் கதையை சொல்லி வெறுப்பு ஏத்திய அட்லீ! உன் சவகாசமே வேண்டாம் என தெறித்து ஓடிய விஜய்

Atlee : தமிழ் சினிமாவில் தோல்வியை சந்திக்காத இயக்குனர் அட்லீ. இவர் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி  வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன்..

யோகி பாபு ப்ரியாமணி மற்றும் பல முன்னணி நடிகர், நடிககள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்தனர். படம் முழுக்க முழுக்க ஆக்சன், எமோஷனல், காமெடி கலந்த படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. 8 நாள் முடிவில் மட்டுமே ஜவான் திரைப்படம் சுமார் 650 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

வெகு விரைவில் 1000 கோடியை தாண்டி புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் மற்றொரு டாப் ஹீரோவான நடிகர் வருண் தவானை வைத்து தெறி படத்தை ரீமேக் செய்து வருகிறார். அதன் பிறகு தான் இவர் தமிழ் பக்கம் திரும்புவார் என கூறப்படுகிறது.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது இயக்குனர் அட்லீ விஜயை வைத்து படம் பண்ணிவிட்டார் அடுத்து ரஜினி, அஜித், தனுஷ், சூர்யா போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்கினால் சிறப்பாக இருக்கும் என கூறிக்கொண்டு வருகின்றனர் இந்த நிலையில் அட்லீ சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

அடுத்து யாருடன் இணைவீர்கள் விஜயுடன் இணைய வாய்ப்பு இருக்கிறதா.? என கேட்டதற்கு அட்லீ வெகு விரைவில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிடுவோம் என கூறி உள்ளார். இவர் சொல்வதெல்லாம் வைத்து பார்த்தால் இவர் விஜய் உடன் இணைவை அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஜவான் பட சமயத்தில் அட்லீ விஜய்க்கு ஒரு ஒன் லைன் கதையை கூறியிருக்கிறார். ஜவான் படம் முடிந்த பிறகு முழு கதையும் விஜய்யிடம் சொல்லி இருந்தாராம். ஆனாலும் அந்தக் கதை விஜய்க்கு திருப்தி தரவில்லையாம் கொஞ்ச நாள் போகட்டும் கூறி இருக்கிறாராம்.