பட்ஜெட்டை தாண்டி செலவு செய்த அட்லி.! கோபத்தில் திட்டிய தயாரிப்பாளர்..

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் அட்லி. இவர் நடிகர் விஜய்யை வைத்து தொடர் மூன்று படங்களை வெற்றி படங்கலாக கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் விஜயின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவராக அட்லி அவர்களும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாமல் இவர் இயக்கிய மூன்று படங்களும் விஜயின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படங்களாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் இவர் இயக்கிய பிகில், மெர்சல், தெறி, ஆகிய மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து இயக்குனர் அட்லி அவர்கள் பாலிவுட் பக்கம் திரும்பிய இவர் பாலிவட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா அவர்கள் நடித்து வருகிறார் மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்களும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் அடலியை திட்டி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது அதுமட்டுமல்லாமல் இதனால் இயக்குனர் அட்லி அவர்கள் சென்னை திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது ஜவான் திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தப் படத்திற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை விட 14 கோடி அதிகமாக செலவு செய்துவிட்டாராம் இயக்குனர் அட்லி இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளரான ஷாருக்கான் அவர்கள் அட்லியை கடுமையாக திட்டி இருக்கிறார். இதனால் கடுப்பான இட்லி அவர்கள் சென்னை திரும்பி இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் ஷாருக்கானின் கோபம் தணிந்த பிறகு ஷாருக்கானை சந்தித்து மீதி படத்தை எடுக்கலாம் என்று முடிவோடு இருக்கிறாராம் இயக்குனர் அட்லி. இதனால் ஜவான் திரைப்படத்திற்கு பெரிய சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்று பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள். மேலும் ஜவான் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment