பழைய குருடி கதவை திறடி என தனது வேலையை காட்டிய அட்லி.! வெளுத்து விட்ட ஷாருக்கான்…

தமிழ் சினிமாவில் மூன்று படங்களை மட்டும் இயக்கி அட்லி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் அட்லி. இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, ப்ரியாமணி, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் இரண்டாம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் ஷாருக்கான் அவர்கள் தற்போது பதான் திரைப்படத்தில் நடித்து உள்ளார் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

இப்படி வெற்றியின் கொண்டாட்டத்தில் இருக்கும் ஷாருக்கான் கோபமடைய செய்து இருக்கிறார் அட்லி. அதாவது இயக்குனர் அட்லி அவர்கள் ஜவான் படத்தை ஜவ்வாக இழுத்துக்கொண்டே போகிறாராம் இதனால் கோபம் அடைந்த ஷாருக்கான் விரைவில் படப்பிடிப்பை முடிக்குமாறு கேட்டிருக்கிறார்.

ஏனென்றால் ஜவான் படம் ரிலீஸ் ஆக இன்னும் குறுகிய மாதங்கள் இருக்கும் நிலையில் இன்னும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு முடிக்கவில்லையாம் இதனால் ஷாருக்கான் கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது அது மட்டும் இல்லாமல் பதான் திரைப்படம் உலக அளவில் ஆயிரம் கோடியை தாண்டி வசூல் செய்து உள்ளது.

இதனால் அட்லிக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. மேலும் ஜவான் படத்தின் அப்டேட் இதுவரைக்கும் வெளியாகாமல் இருக்கும் நிலையில் விரைவில் இந்த படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து விஜய் வைத்து மூன்று படங்களை வெற்றி படமாக கொடுத்த அட்லி இப்படி செய்வது மிகை ஆகாது எனக் கூறி வருகிறார்கள் இதனை தொடர்ந்து இயக்குனர் அட்லி மீது கதை திருட்டு சர்ச்சையும் எழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அட்லி அவர்கள் ஜவான் படத்தை ஜவ்வாக இழுத்து வரும் நிலையில் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment