தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் வருடக்கணக்காக படங்களை இயக்கினாலும் முன்னணி இயக்குனராக வலம் வர முடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள். அதேபோல் ஒரு சில திரைப்படங்களை இயக்கி விட்டு அந்த திரைப்படத்தின் மூலம் ஹிட் கொடுத்தவுடன் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர்களும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்தவர் அட்லி அதற்குப் பிறகு விஜயுடன் தெறி, மெர்சல், பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டார். முன்னணி நடிகர் என்பதால் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என அட்லி தன்னுடைய முழு முயற்சியையும் வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் அட்லி அடுத்ததாக எந்த திரைப்படத்தை இயக்க போகிறார் ஹீரோ யார்.? என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது, அதனால் அட்லீ படத்தை இயக்குவது மட்டும் இல்லாமல் படத்தை தயாரித்து வருகிறார். அட்லீக்கு விஜய் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் அதனை பலமுறை மேடையில் கூறியுள்ளார்.

அட்லி பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார், அவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கிறது. பிரியா அடிக்கடி சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தக்க வைத்துக்கொள்வார்.
அந்த வகையில் அட்லி மற்றும் ப்ரியா இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.