லியோ படத்துக்கு செக் வைத்த அட்லி.! வருத்தத்தில் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களும் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றியினை கண்டது இந்த படங்களை தொடர்ந்து தற்பொழுது அட்லீ பாலிவுட்டில் நுழைந்துள்ளார்.

அதாவது விஜய் ரசிகர்களுக்கு அட்லியின் மீது தனி ஒரு அன்பு இருந்து வருகிறது ஏனென்றால் தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை தந்து சினிமாவில் இந்த அளவிற்கு நல்ல மார்க்கெட்டை விஜய் பெற்றிருக்கும் நிலையில் அதற்கு அட்லியின் படங்களும் ஒரு காரணம் தெறி, மெர்சல் இரண்டுமே வசூல் சாதனையை பெற்றது.

இப்படிப்பட்ட நிலையில் இதனை அடுத்து தற்பொழுது அட்லி ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, விஜய் சேதுபதி, அனிருத் என ஏகப்பட்ட தமிழ் பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தினை அடுத்து விஜய்யின் 68வது படத்தை அட்லி தான் இயக்குவார் என பேசப்பட்டு வந்தது.

எனவே ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படம் ஜூன் மாதம் வெளியாகுவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த படம் அக்டோபரில் வெளியாவதாக கூறப்படுகிறது. மேலும் ஷாருக்கான் நடிப்பில் இறுதியாக வெளிவந்த பதான் படம் விமர்சனங்களுக்கு மத்தியில் வெளிவந்து தற்பொழுது உலகமெங்கும் 1000 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

எனவே ரசிகர்கள் ஜவான் படத்திற்காக எதிர்பார்த்து காத்து வருகின்றனர். இதேபோல் லியோ படத்தின் மூலம் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் அதற்கு ஜவான் செக் வைத்து லியோவுடன் மோத போகிறது. இவ்வாறு விஜய்யுடன் அட்லி மோதுவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

Exit mobile version