முதல் ஆளாக வந்த அசந்திய சூப்பர் ஸ்டார்.! மிரண்ட போன அண்ணாத்த படக்குழு.! என்ன வேலை செய்தார் தெரியுமா.?

தமிழ் சினிமா NO.1 நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் சமிப காலமாகதிறமையான இளம் இயக்குனர்களை கண்டறிந்து வாய்ப்புகளை கொடுத்து வருகிறார் அந்த வகையில் மக்கள் மனதை வென்ற இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி அண்ணாத்த திரைபடத்தில் நடித்து உள்ளார்.

இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, யோகி பாபு போன்ற டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

தற்பொழுது படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து உள்ளதால் மற்ற வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறது ரஜினியும் மற்ற படங்களில் நடிக்க ரெடியாக இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகளுக்காக முதல் ஆளாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் களமிறங்கியுள்ளார்.

இதனால் அண்ணாத்த படக்குழு உற்சாகத்தில் இருக்கிறது. மேலும் மற்ற நடிகர் நடிகைகளும் இனி தொடர்ந்து தனது டப்பிங் வேலைகளை வெகுவிரைவிலேயே முடித்து சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய ரெடியாக இருக்கும் என தெரியவருகிறது.

மேலும் ரஜினி டப்பிங் வேலைகளுக்காக வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இச்செய்தியை தற்பொழுது ரஜினி ரசிகர்கள் வேற லெவல் கொண்டாடி வருவதோடு தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version