தெலுங்கு பக்கம் போன உடனேயே ராஷ்மிகா மந்தனாவுக்கு செக் வச்ச அதிகாரிகள்.. இந்த வேலைய பாத்து இவுங்க தான்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் அடியெடுத்து வைத்து சுல்தான் என்ற திரைப்படத்தில் ஒரு கிராமத்து பெண் வேடத்தில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு தீனி போட்டாலும் படம் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமாரான வசூலைப் பெற்ற மேலும் கலவையான விமர்சனங்களையும் பெற்றது.

ரஷ்மிகா மந்தனாவின் நடிப்பு பேசப்பட்டாலும் அதன் பிறகு தமிழில் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் வராததால் திடீரென மீண்டும் தெலுங்கு சினிமாவிற்கு ஓட்டம் பிடித்தார்.

ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் நல்லதொரு வரவேற்பு இருப்பதால் தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டு இரண்டு அல்லது மூன்று கோடி சம்பளம் வாங்குவதாக சமீபத்திய தகவல்கள் வெளியாகின மேலும் அவ்வப்போது புதிய புதிய கார்கள் வாங்குவது போன்ற புகைப்படங்கள் வெளிவந்ததால் ராஷ்மிகா மந்தனாவுக்கு அதிக அளவில் பணம் வைத்திருப்பதாகவும் நிலம் வீடுகள் இருப்பதாகவும் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகின.

யாரோ இன்ஸ்டாகிராமில் சொன்ன தகவலை உண்மையான நம்பி நம்ம இன்கம்டாக்ஸ் ரெய்டு ஊழியர்களும் உடனடியாக காரை ராஷ்மிகா மந்தனா வீட்டு பக்கம் திரும்பியுள்ளனர். ஆனால் வீட்டை சுற்றி தேடி பார்க்கையில் அங்கு ஒன்றும் இல்லாததால் ஒருகட்டத்தில் வெளியேறினார்.

மேலும் நீங்கள் ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள் 2 கோடியே 3 கோடி என கேட்டதற்கு நான் இரண்டு கோடியை என்கண்ணில் கூட நான் பார்த்ததில்லை என சொல்லி கதறி அழுதுள்ளார். இச்செய்தி தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment