சினிமா உலகில் என்ட்ரியான உடனே என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் க்கு என்னை அழைத்தார்கள் – பல வருடங்கள் கழித்து சொன்ன ரெஜினா.

சினிமாவுலகில் நடிகர்கள் தனது திறமையை காட்டி பட வாய்ப்பை இந்த கைப்பற்றி வலம் வருகின்றனர் ஆனால் சினிமா உலகில் இருக்கும் நடிகைகள் பட வாய்ப்பை கைப்பற்றுவதற்கு முன்பாக அவர்கள் ஒரு சில சிக்கல்களையும் சந்திக்கின்றனர் அவர்களை ஒரு சிலர் தவறாக பயன்படுத்திக் கொள்ள அந்த மாதிரியான விஷயங்களுக்கு அழைப்பார்கள்.

அதை சரியாக புரிந்து கொண்ட பிரபலங்கள் பட வாய்ப்பை வேண்டாம் என ஒதுங்குவது உண்டு. மேலும் அவரைப் பற்றிய புகார் செய்வார்கள். இப்பொழுது இருக்கிறது காரணம் மீ டூ ஒன்று இருக்கிறது. நடிகைகளை ஏதாவது வற்புறுத்தினால் இதில் நாம் சொன்னால் போதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் இதனால் சமீபகாலமாக நடிகைகள் பலரும் நடந்த விஷயத்தை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் ரெஜினா கஸன்ட்ரா 20 வயதில் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தபோது தனக்கு நடந்த சச்சரவுகளை சொல்லி உள்ளார். அவர் கூறியது: நான் சினிமா உலகில் முதலில் கால் எடுத்து வைக்கும் போது ஒருவர் எனக்கு போன் செய்து அட்ஜஸ்ட்மெண்ட் செய்வீர்களா என கேட்டார் எனக்கு அப்போது புரியவில்லை.

அவரும் தொடர்ந்து எனக்கு கால் செய்து கொண்டே இருந்தார் ஒரு கட்டத்தில் நான் உணர்ந்துகொண்டு அவரது காலை கட் செய்தேன் மேலும் ஒரு பொது இடத்தில் ஷாப்பிங் மாலில் நான் பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்தேன் அப்பொழுது ஒருவர் எனது உதட்டை கிள்ளி விட்டு போனார். அதை நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. பேரதிர்ச்சி அடைந்தேன்.

வட இந்திய பெண்கள் ஆரம்பத்திலேயே அந்த மாதிரியான அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்களுக்கு நோ சொல்லி விடுவார்கள் ஆனால் தமிழ் பெண்கள் யோசித்து பொறுமையாக வேண்டாம் என சொல்லுவார்கள் ஆக மொத்தத்தில் பெண்களுக்கு இதுபோன்ற தவறான செயல்கள் பிடிக்காது என ரெஜினா சொல்லி உள்ளார்.

Leave a Comment