என்னை பொறுத்தவரை இவர்தான் அடுத்த கேப்டனாக இருக்க வேண்டும் ராகுல் டிராவிட் வெளிப்படை- யாரை குறிப்பிட்டு பேசியுள்ளார் தெரியுமா.? வெளியான பரபரப்பு செய்தி.

இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு நுழைய தற்பொழுது போராடிக் கொண்டிருக்கிறது இது இப்படி இருக்க இந்த தொடரை முடித்த பிறகு இந்திய அணியின் புதிய கோச்சாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்படுகிறார்.

48 வயதாகும் ராகுல் டிராவிட் இந்திய அணியில் ஓய்வு பெற்ற பிறகு 19 வயதுக்கு உட்பட்ட அணியையும், இந்தியா A அணியையும், தேசிய கிரிக்கெட் அகாடமி என பல இடங்களில் தனது சிறப்பான பணியை கொடுத்தவர். இப்படி வலம் வந்த ராகுல் டிராவிட் அடுத்த இரண்டு வருடங்களுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.

இவர் சமீபத்தில் இந்திய அணியின் அடுத்த கேப்டன் குறித்து பேசியுள்ளார் அவர் கூறுகையில் என்னைப் பொறுத்தவரை என்னுடைய முதல் தேர்வாக கேப்டனாக ரோகித் சர்மா தான் இருப்பார் அவரை தொடர்ந்து வேண்டுமானால் கே எல் ராகுல் அணியின் கேப்டனாக இருந்தால் நன்றாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரோஹித் ஷர்மா இதுவரை இந்தியா மற்றும் ஐபிஎல் காக பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் போட்டியின் தன்மையை பொறுத்து சரியாக பவுலர் மற்றும் பில்டிங்கை சிறப்பாக செயல்படுவது மிக  முக்கியம் அதை சிறப்பாக செயல்படுவதால் ரோஹித் NO.1 தேர்வு. அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது.

இவருக்குப் பிறகு வேண்டுமானால் கே எல் ராகுல் தேர்ந்தெடுக்க முடியும் அவர் பேட்டிங்கில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இன்னும் கேப்டன்ஷிப் பொறுத்தவரை பெரிய அளவு அவருக்கு அனுபவங்கள் இன்னும் கிடைக்கவில்லை என மறைமுகமாக ட்ராவிட் சொல்லி உள்ளார்.

Leave a Comment