ஒன்றரை வயதாகும் மகளை ஹீரோயினாக்க இப்போதிலிருந்து அடிபோடும் ஆர்யா.! அதற்காக இப்படி ஒரு காரியத்தையா செய்யறது…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா இவர் கடந்தார் 2005 ஆம் ஆண்டு வெளியான அறிந்து அறியாமல் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது விரும்பன் பட இயக்குனருடன் கைக்கு கோர்த்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க கொம்பன் மற்றும் விருமன் பட சாயலில் இருப்பது போல கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு கஜினி காந்த் என்ற திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படத்தில் இவருடன் ஜோடியாக சாயிஷா அவர்கள் நடித்திருந்தார். இந்த படத்தினால் ஏற்பட்ட நெருக்கம் நாளடைவில் காதலாக மாறியது அதன் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் ஆர்யாவும் சாயிஷாவும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான இந்த தம்பதியினருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண் குழந்தைக்கு ஆர்யானா என்று பெயர் வைத்துள்ளனர். இந்த நிலையில் இதுவரைக்கும் அந்த குழந்தையின் புகைப்படத்தை எங்கும் பயன்படுத்தாத இந்த தம்பதியினர் தற்போது அந்த குழந்தைக்கு என ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஓபன் செய்து அதில் அந்த ஒன்றரை வயது குழந்தையின் புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த ஒன்றரை வயது குழந்தையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்பவர்கள் மட்டுமே 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் மகளை ஹீரோயினாக ஆர்யா இப்போவே முயற்சி செய்து வருகிறாரா என்று கூறி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த குழந்தையின் இன்ஸ்டாகிராம் பக்கமும் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

arya
arya

Leave a Comment