டைட்டானிக் பட ரேஞ்சுக்கு நடுக்கடலில் நின்று கொண்டு ரொமான்டிக்காக போஸ் கொடுத்த ஆர்யா மற்றும் சாயிஷா.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா இவர் விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஓரம்போ நான்கடவுள் மதராசபட்டினம் பாஸ் என்ற பாஸ்கரன், சிக்குபுக்கு, வேட்டை, சாட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம் ஆரம்பம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் கட்டிபோட்டவர் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது மேலும் 2018 ஆம் ஆண்டு ஆர்யா சாயிஷா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் நடிக்கும் பொழுது ஆர்யாவும் சாயிஷாவும் காதலிக்க ஆரம்பித்தார்கள் பின்பு இருவரும் இணைந்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட ஆர்யா மற்றும் சாயிஷா திருமணவிழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு 2021 ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது குழந்தையின் முகத்தை சாயிஷா அவர்கள் சமூகவலைதளத்தில் பதிவேற்றி கொண்டார் அந்தப் புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வந்தது.

நடிகை சாயிஷா பிரசவத்திற்கு பிறகு தன்னுடைய கணவருடன் இணைந்து புகைப்படம் எதுவும் வெளியிடவில்லை இந்த நிலையில் தற்போது ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் இணைந்து டைட்டானிக் பட பாணியில் கப்பலில் நின்று அழகாக ரொமான்ஸ் செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

arya-sayesha
arya-sayesha

Leave a Comment