திருமணம் செய்து கொள்ளாமல் 20 வருட போராட்டத்திற்கு பிறகு கைகொடுத்த சினிமா.! அருவி பட நடிகருக்கு இப்படி ஒரு நிலைமை..

தற்பொழுது வேண்டுமானால் சினிமாவில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் தனக்கு இருக்கும் திறமையை வீடியோவாக எடுத்து அதனை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இதன் மூலம் திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஆனால் ஒரு 20,30 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஒருவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் அவர் சென்னைக்கு வந்து இயக்குனர் ஆபீஸ், தயாரிப்பாளர் ஆபீஸ் என பல ஆபீஸ்களில் ஏறி இறங்கி அதன் பிறகு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பை பெறுவார்கள் மேலும் வாய்ப்பை பெறாமல் போனவர்கலும் இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு சினிமாவில் நடிக்க ஆசை இருந்ததால் எப்படியாவது சினிமாவில் நடித்து விட வேண்டும் என்ற ஆசைவுடன் சென்னைக்கு வந்தவர் தான் அருவி பட நடிகர் குப்புசாமி. குப்புசாமி ஆரம்ப காலகட்டத்தில் இதழ்கள் மற்றும் பத்திரிகைகளில் ஜோக்குகளை எழுதி அதனை தபால் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இவருடைய படைப்புகள் அனைத்தும் வெளியாகி சிறந்து விலகியதால் ஒரு கட்டத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. எனவே 2004 ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு சென்னை வருகிறார் குப்புசாமி. சென்னைக்கு வந்த பிறகு மிகவும் சின்னதாக இருக்கும் ஒரு ரூமை வாடகை எடுத்து அங்கு தங்குகிறார்.

மறுபடியும் அங்கு இருந்து அவருடைய பத்திரிக்கைக்கு வார இதழ்கள் எழுதி தபால் மூலமாக அனுப்புகிறார். இவ்வாறு தொடர்ந்து போஸ்ட் ஆபீஸ் போனதால் அங்கு இருக்கும் கங்காதர் ஒருவர் குப்புசாமியிடம் நீ என்ன வேலை செய்கிறார் என்பதை பற்றி கேட்கிறார் பிறகு குப்புசாமியும் அனைத்தையும் கூற சாப்பிடுவதற்கு என்ன பண்ணுகிறாய் என்று கேட்டதற்கு ஒரு வேலையும் இல்லை என குப்புசாமி கூறியதால் போஸ்ட் ஆபீஸ்சில் தற்காலிகமான ஒரு பணியை வழங்குகிறார் கங்காதர்.

இப்படிபட்ட நிலையில் 2014ஆம் ஆண்டு வரை சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு அருவி திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நான் நடிக்கப் போகும்பொழுது 80பேருக்கு பிறகு 81வது ஆளாக போனேன் இயக்குனர் என்னிடம் ஸ்கிரிப்ட் கொடுத்து படிக்க சொன்னார் பிறகு பேப்பரை வாங்கிக்கொண்டு நடி என்று கூறியதும் நான் நடித்தேன் அதன் பிறகு இயக்குனருக்கு பிடித்து போய் என்னை செலக்ட் செய்து விட்டார் என சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் எனது குடும்பத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் எனக்கு அப்பா அம்மா இருந்தார்கள் ஆனால் இப்பொழுது யாரும் இல்லை இரண்டு சகோதரிகள் உள்ளார்கள் அவர்கள் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்கள் தற்பொழுது எனக்கு திருமணம் செய்து கொள்வதற்காக பெண் தேடிக் கொண்டிருக்கிறேன். தற்பொழுது தபால் நிலையத்தில் வேலை பார்த்துக் கொண்டே திரைப்படங்களிலும் நடித்து வருகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment