தாலி கட்டிய மனைவியை தொட்டு கூட பார்க்க முடியாமல் கதறி அழும் அருண்ராஜா காமராஜ்.! பார்ப்பவரை அழவைக்கும் புகைப்படம்.

தமிழ் திரை உலகில் பல்வேறு விதமான திறமைகளை வளர்த்துக் கொண்டு சிறப்பாக பயணித்து வரும் பிரபலங்களில் ஒருவராக இருப்பவர் அருண்ராஜா காமராஜ். சினிமாவுலகில் பாடகராகவும், பாடலாசிரியராகவும் தனது பயணத்தை தொடர்ந்து பின்நாட்களில் இயக்குனராகவும், காமெடியனாக மாறி தன்னை பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தி கொண்டார்.

ஆரம்பத்தில் இவரது பாடல்கள் மிகப் பெரிய அளவில் ரீச் ஆனதை தொடர்ந்து இவர் பெயர் பேசப்பட்டது அதன் விளைவாகத்தான் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பராக மாறினார் ஒரு கட்டத்தில் பாடலாசிரியராக இருந்த இவர் ஒரு கதையை புதுவிதமான கதையை சிவகார்த்திகேயனும் சொல்ல கதை சூப்பராக இருக்கிறது என்று சொல்லி உடனே அந்த படத்தை எடுத்தனர்.

அந்த படம் வேறு எதுவும் இல்லை கனா தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது வளர்ந்து வரும் இயக்குனராகவும் பார்க்கப்பட்டார் அருண்ராஜா காமராஜ். பாடலாசிரியராக இயக்குனராக மாறிய இவர் ராஜா ராணி திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து காமெடியனாகவும் அசத்தியிருந்தார் இதில் அவரது நடிப்பு மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.

இப்படி சினிமாவில் தோட்டத்தில் வெற்றி கண்டு வந்த இவர் மேலும் முன்னேறிச் செல்வதற்கு உதயநிதி ஸ்டாலினை வைத்து article 15 என்ற திரைப்படத்தை எடுக்க அதிக முனைப்பு காட்டினார். இந்த படம் விரைவில் எடுக்க இருந்த நிலையில் தற்போது  அவரது மனைவியை சிந்துஜா இறந்து உள்ளார். சமீபத்தில் கொரோனா தொற்று பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இந்த நிலையில் திடீரென அவர் இறந்துவிட்டார்.

கொரோனா ஒரு காரணமாக சிந்துஜா இறந்து உள்ளதால் பலரும் தற்பொழுது கிட்ட கூட நெருங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது அதிலும் தொட்டுத் தாலி கட்டிய அருண்ராஜா காமராஜ் கூட கிட்ட நெருங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது பலரையும் தற்போது கண்கலங்க வைத்துள்ளது.

இறப்பு நேரத்தில் கூட கிட்ட செல்ல முடியாது எவ்வளவு பெரிய வலி என்பது பலரும் அறிவார்கள் மேலும் அவருக்கும் கொரோனா தொற்று பரவி இருப்பதால் அவரிடம் இருந்து பரவாமல் இருக்க மருத்துவர்கள் கொடுத்த உடையை அணிந்து தற்போது அஞ்சலி செலுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதள பக்கங்களில் பரவி வருகிறது. இதை பார்ப்போரை கண் கலங்க வைத்துள்ளது. மேலும் சிந்துஜாவின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் போன்ற ஒரு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

sinthusha
sinthusha

Leave a Comment