வசூலில் பட்டையை கிளப்பும் அருண் விஜயின் யானை – 2 நாள் முடிவில் அள்ளிய தொகை எவ்வளவு தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் ஹீரோ வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து உள்ளவர் நடிகர் அருண் விஜய் இவர் இப்பொழுது ஆக்சன் இயக்குனர் ஹரியுடன் இணைந்து யானை என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த படம் சில தினங்களுக்கு முன் திரையரங்கில் வெளியானது.

படம் ஆக்சன் செண்டிமெண்ட் கலந்த படமாக இருப்பதால் ரசிகர்களையும் தாண்டி மக்களை நன்றாகவே கவர்ந்து இழுத்து உள்ளது. யானை படத்தில் அருண் விஜய் உடன் கைகோர்த்து பிரியா பவானி சங்கர், யோகி பாபு, சமுத்திரகனி, ராதிகா சரத்குமார் மற்றும் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.

ஒவ்வொருவரும் படத்தின் கதைக்கு ஏற்றபடி சிறப்பாக நடித்துள்ளதால் படத்திற்கு பக்க பலமாக இவர்கள் இருக்கின்றனர். அருண் விஜய் படம் முழுக்க ஆக்சன் சென்டிமென்ட் சீன்களில் பின்னி பெடல் எடுத்துள்ளது இந்த படத்திற்கு பிளஸ் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது படம் முதல் நாளில் மட்டுமே சுமார் 4 கோடி தமிழகத்தில் மட்டும் வசூல் செய்தது.

தற்பொழுது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் உலகம் முழுவதும் யானை திரைப்படம் இரண்டு நாட்களில் மட்டுமே சுமார் 7 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன வருகின்ற நாட்களிலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது அதனால் நிச்சயம் யானை திரைப்படம்.

மிகப்பெரிய ஒரு வசூலை  அள்ளித் தான் நிற்கும் என கூறப்படுகிறது மேலும் அருண் விஜய் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இது இருக்க வாய்ப்பு இருக்கிறது மேலும் ஹரிக்கு இது ஒரு சிறந்த திரைப்படமாக பார்க்கப்படும் என சொல்லப்படுகிறது.

Leave a Comment