வசூலில் பட்டையை கிளப்பும் அருண் விஜயின் “யானை” – 3 நாள் முடிவில் மட்டும் இத்தனை கோடியா..

அண்மை காலமாக சிறந்த திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விக்கின்றன அந்த வகையில் விக்ரம் படத்தை தொடர்ந்து வெளி வந்த ஒரு சில திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன அதில் ஒன்றாக இருக்கிறது யானை திரைப்படம்.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக இருப்பதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், யோகி பாபு மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தி உள்ளனர் இந்த படத்தின் முதல் நாளில் இருந்து இந்த படத்திற்கான வசூல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

யானை திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களாகின்ற நிலையில் இதுவரை சுமார் 9 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை யானை திரைப்படம் அள்ளும் என கூறப்படுகிறது. யானை படத்துடன் பல்வேறு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன அந்த வகையில் யானை படத்தை எதிர்த்து டி ப்ளாக், ராக்கெட்ரி ஆகிய படங்கள் வெளிவந்தன.

இருப்பினும் யானை படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது மேலும் அதிக திரையரங்குகளில் வெளியாகி உள்ளதால் நிச்சயம் யானை திரைப்படம் ஒரு நல்ல வசூலை அள்ளிதான் நிற்கும் என கூறப்படுகிறது நிச்சயமாக இந்த திரைப்படம் இயக்குனர் ஹரிக்கும்  அருண் விஜய்க்கும் சிறந்த ஒரு படமாக யானை இருக்கும் என தெரியவருகிறது.

Leave a Comment