பத்திரிக்கையாளர் கேட்ட நச்சு கேள்வி.? விழி பிதுங்கி அப்படியே சென்ற அருண் விஜய்.! அட அப்படி என்ன கேட்டார்.?

90s காலகட்டத்தில்  சாக்லேட் பாயாக சினிமாவில் அறிமுகமான அருண் விஜய் அப்போது முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் அளவிற்கு அவருடைய திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு புது புது நடிகர்கள் சினிமாவில் நுழையவே அவருடைய மார்க்கெட் சரிந்தது.

அதன் பிறகு பட வாய்ப்பு குறைய ஆரம்பிக்கவே சினிமாவிலிருந்து ஒரு சில ஆண்டுகள் விலகி இருந்தார். அதன் பிறகு அஜித் நடிப்பில் மாபெரும் ஹிட் அடித்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் வில்லனாக புது அவதாரம் எடுத்தார். அதன் பிறகு திரும்பவும் அவருடைய மார்க்கெட் உயரவே அவருக்கு பட வாய்ப்பு குவிய ஆரம்பித்தது.

அந்த வகையில் தற்போது ஹரி இயக்கத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் திரைப்படம் யானை இந்த திரைப்படத்தில் நடிகர் அருள் விஜய், சமுத்திரகனி, பிரியா பவானி சங்கர் என பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்கு ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு ஹரியின் யானை திரைப்படம் தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ளது. விக்ரம் நடித்த சாமி 2 திரைப்படம் இவருக்கு போதுமான வரவேற்பு பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதன்பிறகு தற்போது சூர்யாவை வைத்து அருவா படத்திற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தார் இயக்குனர் ஹரி.

yaanai
yaanai

தற்போது தனது மைத்துனன் அருண் விஜயை வைத்து யானை படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் யானை படம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த அருண் விஜய் இடம் பத்திரிகையாளர் ஒருவர் படத்தில் மட்டும் குடும்பங்கள் வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ஆனால் சொந்த குடும்பத்தில் ஒருவரை மட்டும் தனியாக ஒதுக்கி வைத்துள்ளீர்கள் அவரை திரும்ப சேர்த்துக் கொள்வீர்களா என்று கேட்டுள்ளார்.

அதாவது நடிகை வனிதா விஜய குமார் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபட்டால் கடந்த 5 வருடங்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த பத்திரிக்கையாளர் வனிதாவை குடும்பத்தில் சேர்த்துகொள்விர்ர்களா என்று கேட்டுள்ளார்.

vanitha
vanitha

அதற்கு அருண் விஜய் சிரித்தபடியே அங்கிருந்து சென்று விட்டார். மேலும் யானை படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார் நடிகை வனிதா விஜய குமார். ஆனால் அருண் விஜய்  சிரித்து கொண்டு அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment