ஆத்தாடி அந்த அட்டு படத்தின் இரண்டாம் பாகமா வேண்டவே வேண்டாம் தலை தெறித்து ஓடிய அருண் விஜய்.!

துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் பிரபலமாநார் இயக்குனர் கார்த்திக் நரேன். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அருண்விஜய் வைத்து மாபியா என்ற திரைப்படத்தை  இயக்கினார். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

அதனைத் தொடர்ந்து அடுத்த  முன்னணி நடிகரான தனுஷ் அவர்களை வைத்து மாறன் என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகியது. இந்த திரைப்படமும்  இயக்குனர் கார்த்திக் நரேன் அவருக்கு மிகப்பெரிய தோல்வியை தந்தது.

இதையெல்லாம் கண்டுக்காத இயக்குனர் கார்த்திக் நரேன் மீண்டும் நடிகர் அருண் விஜய்யிடம் கால் செய்து மாபியா 2  படம் எடுக்கலாமா என்று கேட்டுள்ளார் அதற்கு அருண்விஜய் பார்க்கலாம் என சொல்லிவிட்டு போனை வைத்து வைத்து விட்டதாக சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றது.

mafia

அருண் விஜய் அவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் கமர்சியல் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தைப் பிடித்திருந்தார்.பிறகு எந்த ஒரு திரைப்படமும் அவருக்கு சரியாக அமையாததால் சினிமாவை விட்டு சிறிது காலம் விலகி இருந்தார்  என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

அதன் பிறகு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்து மாஸ் காட்டியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாபியா போன்ற திரைப்படங்களை நடித்தால் இவரது மார்க்கெட் குறைந்து விடும் எனவும் கூறி வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version