நடிகர் விவேக்கின் “கனவு ஆசைக்கு” தொடக்கப் புள்ளி வைத்த நடிகர் அருண் விஜய் மற்றும் அவரது குடும்பம்.! மனசார வாழ்த்தும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர் நடிகர்களுக்கும் பிடித்த நடிகராக வலம் வந்தவர் மறைந்த காமெடி நடிகர் விவேக். இப்படி பட்டவர் இறந்த செய்தியைக் கேட்டு பல திரைப் பிரபலங்கள் ஷாக் ஆனதோடு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி  மரியாதையை கொடுத்தனர்.

இவர் இறந்து ஓரிரு தினங்களாக ஆனா நிலையிலும் இவரைப் பற்றிய செய்திகள்வெளிவந்து கொண்டிருக்கின்றன. விவேக் உடன் பல நடிகர் நடிகைகள் பணியாற்றிய புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து தனது இரங்கலை தெரிவிக்கின்றனர்.

இந்த  நிலையில் அதையும் தாண்டி ஒருபடி மேலே சென்று நடிகர் விவேகின் கனவு ஆசையான ஒரு கோடி மரக்கன்று நடும் திட்டத்தில் தற்போது ரசிகர்கள் ஏற்று தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் இப்படி இருக்கின்ற சூழலில் நடிகர் அருண் விஜய் தனது குடும்பத்துடன் சேர்ந்து அவரது நினைவாக மரக்கன்று நட்டு அவரது கனவு ஆசைக்கு தொடக்க புள்ளி வைத்துள்ளார்.

அருண் விஜய்  காமெடி கிங் விவேக் இறப்பு செய்தியை கேட்டு உடனடியாக பதறி அடித்துக் கொண்டு அவரது உடலை பார்க்க நேரில் சென்றார் தற்போது அவரது நினைவாக இதுபோன்ற செயல்களை செய்து உள்ளதால் அவரையும் அவரது குடும்பத்தினரையும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இச்செயல் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது பிரபலங்களும் விவேக் நினைவாக விட்டில் மர கன்றை தற்போது வைக்க தொடங்கிஉள்ளனர். எப்படியாவது ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு அவரின் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டும் என பலரும் ஏங்கிகொண்டிருக்கின்றன.

Leave a Comment