IPL – லில் ஒரு போட்டியில் கூட விளையாடாத அர்ஜுன் டெண்டுல்கர்.? விளக்கம் கொடுக்கும் சச்சின்.

கிரிக்கெட் உலகில் பல நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் அவர்களுக்கு எல்லா முன்னோடியாக திகழ்ந்தவர் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இவர் விளையாடாத ஷார்ட்டே கிடையாது அடிக்காத சதங்களை கிடையாது என கூறப்படுகிறது.

சச்சினை தொடர்ந்து அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அவர்களும் கிரிக்கெட்டை அதிகம் நேசிக்கிறார் கிரிக்கெட்டில் சாதனை படைக்க அவரும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார் இருப்பினும் அதற்கான சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகின்றன ஐபிஎல் – லில் மும்பை அணி இரண்டு தடவை அவரை அணியில் எழுதப்பட்டாலும் வாய்ப்புகள் கொடுக்காமல் பயிற்சி மட்டுமே மேற்கொண்டு வருகிறார்.

இதனால் ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் ஏன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு மட்டும் ஐபிஎலில் வாய்ப்புகள்  கொடுக்கப்படாமல் இருக்கிறார் என்பது குறித்து பல்வேறு விதமான கேள்விகளை கேட்டு வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் சச்சின் சார் இடமும் கேள்விகள் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர் அதற்கு அவர் பதில் கூறியது.

இது வித்தியாசமான ஒரு கேள்வி நான் என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமல்ல இந்த சீசனில் மும்பை அணி லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிந்துவிட்டது அர்ஜுனுடன்  என்னுடைய உரையாடல் எப்பொழுதும் இப்படித்தான் இருக்கும் உன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை பாதை சவாலானது மிகவும் கடினமாக இருக்க போகிறது.

உனக்கு கிரிக்கெட் மீது ஈடுபாடு இருந்தால் கிரிக்கெட் விளையாட தொடங்கினாய் அந்த ஆர்வம் இருந்தால் வாய்ப்பு கிடைக்கும்வரை இனி தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் அப்படி செய்தால் அதற்குரிய பலன் கிடைக்கும். ஆடும் லெவனில் அவரை சேர்ப்பது அணி நிர்வாகம் முடிவு அணி தேர்வில்  நான் ஒருபோதும் தலையிடுவது கிடையாது என தெரிவித்தார்.

Leave a Comment