அர்ஜுன், ஜீவா கூட்டணியில் உருவாகும் முதல் திரைப்படம்.! வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் சாக்லேட் பாயாக நடித்து பின்னர் மாஸ் ஹீரோவாக மாறிய நடிகர்களில் ஜீவாவும் ஒருவர். இவர் தற்போது பா விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த திரைப் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே படக்குழு வெளியிட்டு இருந்தது ஆனால் சமீபத்தில்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் மற்றும் ராசிக்கு அவர்கள் கதாநாயகியாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் ரோபோ சங்கரின் மகள், ராதாரவி,ரோகினி,சாரா,கைதி பட தீனா என பல  நட்சத்திர பட்டாளமே நடித்த வருகிறது.

இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படம் துவங்கியபோது தயாரிப்பாளர் சர்ச்சையில் சிக்கியதால் இந்த படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.

jeeva
jeeva

மீண்டும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் மற்றும் இந்த திரைப் படத்தின் தலைப்பும் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இத்திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் முதன்முதலாக ஜீவா மற்றும் அர்ஜுன் இணைகிறார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment