அந்த ஆளு ரொம்ப மோசமானவன்..! வைரமுத்து பற்றி எச்சரித்த சின்மயிக்கு பாடம் புகட்டிய அர்ச்சனா.!

பொதுவாக தமிழ் சினிமாவில் பாடகியாக வலம் வரும் சின்மயி மற்றும் வைரமுத்து ஆகிய இருவருக்கும் உள்ள பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது அந்த வகையில் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார் என வைரமுத்து மீது சின்மயி கொடுத்த புகார் சமூக வளைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வந்தன.

இதனைத் தொடர்ந்து அந்த விஷயம் சர்ச்சையில் முடிவடைந்தது மட்டுமில்லாமல் பாடகி சின்மயிக்கு அதன் பிறகு பாடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு விட்டது இந்நிலையில் மீண்டும் வைரமுத்துவை சீண்டும் விதமாக பாடகி சின்மயி  ஒரு கமெண்டை வெளியிட்டுள்ளார் அதாவது அவர் கூறியது என்னவென்றால் விஜய் டிவியின் மூலம் பிரபலமான விஜே அர்ச்சனா தற்பொழுது சீரியலை விட்டு விட்டு பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருகிறார்.

அந்த வகையில் அவர் திடீரென கவிஞர் வைரமுத்துவை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டும் இல்லாமல் இதற்கு சின்மயி ஒரு கமெண்ட் ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில் அவர் கூறியது என்னவென்றால் இப்பொழுது தலைமேல் கை வைத்து ஆசீர்வதிப்பது போல் இருக்கும் நாளடைவில் அவை மாறுபடும் என்று கூறியது மட்டும் இல்லாமல் அவரிடம் பழகும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று எச்சரித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சின்மயி வெளியிட்ட பதிவுக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமாண்டுகள் நாளுக்கு நாள் குவிந்தது மட்டுமில்லாமல் இதனை நெட்டிசங்கள் பலர் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாக்கி வந்தார்கள். மேலும் இதைத் தொடர்ந்து அர்ச்சனாவிடம்  பல கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் என்னுடைய அப்பா ஒரு ஆசிரியர் என் வீட்டில் எல்லோருக்கும் வைரமுத்து சாரை மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் ஒரு நாள் நான் படபிடிப்பு தளத்தில் வைரமுத்து சாரை சந்தித்தேன் அப்பொழுது நான் அவரிடம் எப்படி இருக்கீங்க சார் என்று கேட்டது மட்டும் இல்லாமல் நான் உங்களுடைய ரசிகை என்று கூறினேன் அவ்வளவுதான் ஆனால் எனக்கு சின்மயியை எந்த ஒரு தனிப்பட்ட முறையிலும் தெரியாது.

மேலும் சிலர் இப்படி தான் பேச செய்கிறார்கள் ஊர் வாயை அடைப்பது நம்மால் முடியாது நான் வைரமுத்துவின் தீவிர ரசிகை என்ற காரணத்தினால் தான் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன் அவ்வளவுதான் இதை புரியாதவர்கள் பலரும் நாளுக்கு நாள் சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு புதிய புதிய பிரச்சனைகளை உண்டாக்கி வருகிறார்கள் என  சின்மயிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அர்ச்சனா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

Leave a Comment