மாட்டுப் பொங்கலும் அதுவுமாக அறந்தாங்கி நிஷா தன்னுடைய கணவருடன் வெளியிட்ட வீடியோ.! லைக் அள்ளும் வீடியோ

பொங்கல் தினத்தை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் சீரியல் பிரபலங்கள் மற்றும் தொகுப்பாளினிகள் என பலரும் பொங்கல் தினத்தை கொண்டாடி அந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அவ்வாறு பதிவிடும் வீடியோவிற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

நேற்று பொங்கல் தினத்தை கொண்டாடியது போல் இன்று மாட்டுப் பொங்கலை பிரபலங்கள் பலரும் விமர்சையாக கொண்டாடி உள்ளார்கள் அந்த வகையில் விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அடிக்கடி காமெடியான வீடியோவை வெளியிட்டு வருவார் அவ்வாறு வெளியிடும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

இந்த நிலையில் தற்போது மாட்டு பொங்கலை அவருடைய கணவருடன் கொண்டாடியுள்ளார் அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அறந்தாங்கி நிஷாவின் கணவர் நான் செய்த பொங்கலை நீயாவது சாப்பிட வந்தாயே மகாலட்சுமி என கணவர் சொல்ல இது காளை மாடு-யா எனக் கிண்டல் செய்து கலாய்த்து உள்ளார் நிஷா.

மேலும் அந்த வீடியோ பதிவு அறந்தாங்கி நிஷா கூறியதாவது கிராமங்களில் மாடு வச்சிருக்கிற வீட்டில் இருந்து வெளியூர்களுக்கு போனா இரவு தங்க மாட்டார்கள் வீட்டில் மாடு பசியோடு இருக்கும் என்று உடனே வந்துவிடுவார்கள் இன்றைக்கும் கிராமங்களில் கருப்பன், கொம்பன் அப்படின்னு மாடு பெயரே நிறைய மனிதர்களுக்கு வைத்திருப்பார்கள் வீட்டில் இறந்து போன மாட்டைத் தெய்வமாக வணங்கி அதோட பெயரை தன் பிள்ளைகளுக்கு வைப்பார்கள்.

நம்ம ஊர்ல மட்டும்தாங்க மாடுகளை தன் மூத்த பிள்ளையாக பார்க்கிற ஈழம் மனங்களை பார்க்க முடியும் மாடாக உழைக்கும் உழவனுக்கும் அந்த உழவனுக்காக உழைக்கும் மாட்டிற்கும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment