300 தொழிலாளர்கள் 200 கலைஞர்கள் கொண்டு உருவாக்கப்பட்ட அரண்மனை படத்தின் கிளைமேக்ஸ் இது தான்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆர்யா இவர் தற்போது சார்பட்டா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது.

அதை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார். இவர் தற்போது நடித்து வரும் புதிய படம் அரண்மனை 3 மற்றும் எனிமி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

அரண்மனை 3ஆம் பாக திரைப்படத்தை இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர் சி இயக்கியுள்ளார். எப்பவுமே சுந்தர் சி புதிய நட்சத்திர பட்டாளங்களை களம் இறக்கி படம் இயக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல் இவர் எடுத்த அரண்மனை படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

அதன்பிறகு அரண்மனை இரண்டாம் பாகம் எடுத்துள்ளார் அந்த திரைப்படம் முதல் பாகம் கொடுத்த வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இருப்பினும் தற்போது அரண்மனை 3ஆம் பாகத்தை இயக்குனார் சுந்தர் சி. இந்த மூன்றாம் பாகம் முதல் இரண்டு பாகத்தை விட மிகபெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

aranmanai 3
aranmanai 3

இந்த திரைப்படத்தில் ஆர்யா,ராசி கண்ணா,சுந்தர் சி,விவேக்,யோகி பாபு,சக்ஷி அகர்வால், மனோபாலா, போன்ற பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதன் முறையாக இயக்குனர் சுந்தர் சியும் மற்றும் இந்தியாவின் முக்கிய சண்டை பயிற்சி இயக்குனர் பீட்டர் ஹெனும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

அரண்மனை 3 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை 1.5 கோடி ரூபாய் செலவில், 300 தொழிலாளர்களை வைத்து உருவாகும் பிரமாண்ட செட்டில், 200 கலைஞர்கள் பங்கேற்க 16 நாட்களிலேயே படமாக்கப்பட்டது அரண்மனை 3.

இந்த படத்தின் முக்கியத்துவமான இந்த கிளைமாக்ஸ் காட்சியில் கிராபிக்ஸ் பணிகள் மட்டுமே ஆறு மாதங்களாக நடைபெற்றது.இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.இதனை திரையரங்கில் வெளியிட வேண்டும் என்றனர். இந்நிலையில் அரண்மனை 3 திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடும் திட்டத்தை கைவிட்டு திரையரங்கில் வெளியிடும் வேலைகளை செய்து வருகிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் குஷ்பூ.

Leave a Comment